(1799)

(1799)

துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள்,

பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,

செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,

கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே.

 

பதவுரை

செம் கால்

சிவந்தகால்களையுடைய

அன்னம்

அன்னப்பறவை

திகழ் தண் பணையில்

அழகிய குளிர்ந்த நீர் நிலைகளிலே

கொங்கு ஆர் கமலத்து அலரில்

மணம்மிக்க தாமரைப்பூவில்

பெடையோடும்

பேடையுடனே

சேரும்

சேர்ந்துவாழுமிடமான

குறுங்குடி

குறுங்குடியானது

துங்கம்

ஓங்கினவைகளாய்

ஆர் அரவம்

பெரிய ஆரவாரத்தை யுடையவைகளான

திரை

அலைகள்

வந்து உலவ

வந்து வீச

தொடு கடலுள்

ஆழ்ந்த திருப்பாற்கடலிலே

பொங்கு ஆர் அரவில்

பெரிய திருமேனி வாய்ந்த திருவனந்தாழ்வான் மீது

துயிலும்

திருக்கண்வளர்ந்தருளா நின்ற

புனிதர்

பரமபவித்திரரான பெருமாளுடைய

ஊர் போலும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளுமழகு எளியர்க்குக் கிட்ட வொண்ணாதிருக்குமென்பது மாத்திரமேயல்லாமல் பிரமன் முதலியோர்க்குங்கூட இக்கரையிலே நின்று கூப்பிட வேண்டும்படியிருக்குமாதலால் அவ்வருமையைப் போக்கி எல்லார்க்குமெளியனாக எழுந்தருளியிருக்குமிடம் திருக்குறுங்குடி யென்கிறார்.

துங்கார் -துங்கம் என்பது வடசொல், உந்நதம் என்றபடி, ‘துங்கார்’ என்றது விகாரப் புணர்ச்சி. பொங்கு+பொங்கார், பொங்கு-முதனிலைத் தொழிற்பெயர், பொங்குதல் நிறைந்த அரவம் என்றபடி, எம்பெருமான் இடைவிடாது தன்மேல் சாய்ந்தருளப் பெறுவதனுலுண்டாகிய மகிழ்ச்சி மிக்கவன் என்றபடி.

பணை -நீர் நிலம் “பண்ணை” என்பதன் தொகுத்தல்.

 

English Translation

The waves of the roaring ocean come touching the feet of the pure Lord who reclines in its midst, on a serpent bed.  His abode is kurungudi where swans with red feet nestle with their mates in beds of fragrant lotus blossoms amid cool lakes

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top