(177)
ஆலத் திலையான் அரவி னணைமேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா
பதவுரை
|
(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு) |
||
| ஆலத்து இலையான் |
– |
ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும் |
| அரவின் அணை மேலான் |
– |
(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்பவனும் |
| நிலம் கடலுள் |
– |
கருநிறமான சமுத்திரத்தில் |
| நெடுங்காலம் |
– |
வெகுகாலமாக |
| கண் வளர்ந்தான் |
– |
யோக நித்ரை செய்பவனும் |
| பாலம் பிராயத்தே |
– |
குழந்தைப்பருவமே தொடங்கி |
| பார்த்தற்கு |
– |
அர்ஜுநனுக்கு |
| அருள் செய்த |
– |
க்ருபை செய்த |
| கோலம் |
– |
அழகிய வடிவத்தையுடைய |
| பிரானுக்கு |
– |
தலைவனுமான இவனுக்கு |
|
ஓர் கோல் கொண்டு வா; |
||
|
குடந்தை கிடந்தாற்கு ஓர் ** வா. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆல்+இலையான்=(அத்துசாரியைப் பெற்று) ஆலத்திலையான். கஷீராப்தி எம்பெருமான் திருமேனியின் நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுமாதலால் ‘நீலக்கடல்’ எனப்பட்டது; “**************” என்று போஜராஜன் சொல்லியுள்ளது காண்க. அன்றி, “உவர்க்குங்கருங்கடல் நீருள்ளான்” என்றபடி லவணஸமுத்ரத்தில் பள்ளிகொண்டிருப்பதாகக் கூறுவதும் உண்டாதலால் அதுவுங்கொள்ளத்தக்கதே. ….
English Translation
The Lord appeared as a child on a fig leaf; he reclines on a serpent and sleeps for long in the deep ocean. He appears as the Archa reclining in Kudandai. Even in his childhood he graced Arjuna. He is the beautiful child here. O Raven! Go fetch him a grazing staff.
