(177)

(177)

ஆலத் திலையான் அரவி னணைமேலான்

நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்

பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த

கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா

பதவுரை

(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு)

ஆலத்து இலையான்

ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்

(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்பவனும்
நிலம் கடலுள்

கருநிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்

வெகுகாலமாக
கண் வளர்ந்தான்

யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே

குழந்தைப்பருவமே தொடங்கி
பார்த்தற்கு

அர்ஜுநனுக்கு
அருள் செய்த

க்ருபை செய்த
கோலம்

அழகிய வடிவத்தையுடைய
பிரானுக்கு

தலைவனுமான இவனுக்கு

ஓர் கோல் கொண்டு வா;

குடந்தை கிடந்தாற்கு ஓர் ** வா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆல்+இலையான்=(அத்துசாரியைப் பெற்று) ஆலத்திலையான். கஷீராப்தி எம்பெருமான் திருமேனியின் நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுமாதலால் ‘நீலக்கடல்’ எனப்பட்டது; “**************” என்று போஜராஜன் சொல்லியுள்ளது காண்க. அன்றி, “உவர்க்குங்கருங்கடல் நீருள்ளான்” என்றபடி லவணஸமுத்ரத்தில் பள்ளிகொண்டிருப்பதாகக் கூறுவதும் உண்டாதலால் அதுவுங்கொள்ளத்தக்கதே. ….

English Translation

The Lord appeared as a child on a fig leaf; he reclines on a serpent and sleeps for long in the deep ocean. He appears as the Archa reclining in Kudandai. Even in his childhood he graced Arjuna. He is the beautiful child here. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top