(1769)

(1769)

உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு

முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,

பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்

பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே.

 

பதவுரை

நெஞ்சே

மனமே!

இங்கு இருந்து

இங்கேயிருந்துகொண்டு

நினைந்து

சீந்தித்து

உருகி

உருகுவதனால் என்னபயன்?

(பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;)

வண்டு

வண்டுகள்

முருகு உண்

தேனுண்ணப் பெற்ற

மலர்

பூவையுடைத்தான

கைதையின்

தாழையினுடைய

நீழலில்

நிழலிலே

முன் ஒருநாள்

முன்பொருநாள்

என் உள்ளம்

என்னெஞ்சானது

பெருகு காதன்மை எய்த

மிக்க ஆவல்கொள்ளும்படி

பிரிந்தான்

பிரிந்துபோன பெருமானுடைய

இடம்

இருப்பிடமாயும்

முந்நீர்

கடவானது

பொருது

அலையெறிந்து

கரைக்கே

கரையிலே

மணி உந்து

ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள

புல்லாணி

திருப்புல்லாணியை

தொழுதும்

சென்றுவணங்குவோம்;

எழு

எழுந்திரு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெஞ்சமே! இவ்விடத்திலிருந்து கொண்டு அப்பெருமானைச் சிந்தித்து உருகுவதனால் என்ன பலணுண்டாம்? நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம் முடைய சிந்தனை தீரவேணுமானாலும் இங்கிருப்பதில் பயனில்லை; புல்லாணியே போய்த் தொழவேணுங்காண். அவ்விடத்தில் வண்டு முதலிய திர்யக்ஜந்துக்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழ்கின்றனவாதலால் நாமும் அங்குப்போய் அபிமதம் பெற்றுக் களித்துவாழப் பெறலாமன்றோ என்கிறாள்.

 

English Translation

O Heart! Bow that-a-ways and arise.   What use sifting here and melting? One day in the past, in the shade of the screwpine, teaming with nectar-drunken bees, he filled my heart with love and left.  He resides in Pullani by the sea whose waves wash gems on the shore

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top