(1741)

(1741)

பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்

உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்

மண்ணாளா வாள்நெடுங் கண்ணி மதுமலராள்

கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே.


பதவுரை

மண் ஆளா

பூமிப்பிராட்டியை ஆள்பவனே!

வாள் நெடு கண்ணி

ஒளிபொருந்திப் பெருத்த கண்களையுடையவளும்

மது மலராள்

மதுபெருகுகின்ற மலரிற் பிறந்தவளுமான ஸ்ரீ மஹா லக்ஷமிக்கு

கண்ணாளா

வல்லபனானவனே!

கண்ணபுரத்துறையம்மானே!- ;

பெண் ஆனாள்

பெண்வடிவுகொண்டுவந்த பூதனையினுடைய

பேர் இள கொங்கையின்

பெரிதும் இளையதுமான ஸ்தநத்திலுள்ள

ஆர் அழல் போல்

நெருப்புப்போன்றதான

உண்ணா

உண்ணமுடியாத

நஞ்சு

விஷத்தை

உண்டு

உறிஞ்சியுண்டு

உகந்தாயை

திருவுள்ளமுவந்த வுன்னை

நான் உகந்தேன்

நான் அடைந்து மகிழப் பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேன், கைக்கொள்வதற்குரிய சிறந்த வஸ்து அல்லேனாயினும், பேய்ச்சியாகிய பூதனை உன்னைக் கொல்வதற்காகத் தன்முலையில் தடவிக்கிடந்த விஷமே உனக்கு விரும்பத்தக்கதானபோது  அடியேன்தானோ விரும்பத்தகாதவனாகப் போகிறேன்; அந்த விஷத்திற் காட்டிலும் கொடியவனோ நான்? அப்படி கொடியவனேயாயினும், புருஷகாரம் பண்ணிச் சேர்ப்பிக்கவல்ல பிராட்டிமார் இணைபிரியாதிருக்க நான் இழக்க வேண்டுவதுண்டோ? என்கிற கருத்தையடக்கி இப்பாசுர மருளிச் செய்கிறார்.

 

English Translation

O Lord of Dame Earth!  O Lord of lotus-lady Lakshmi! O Lord of Kannapuram! O Lord who delighted in sucking the terrible poison on the breasts of the hot agrees disguised as a beautiful nurse! My heart delights in you!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top