(1739)

(1739)

பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்

ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்

வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்

கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

கண்ணபுரத்து உறை அம்மானே!- ;

பெரு நீரும்

ஸமுத்ரங்களையும்

விண்ணும்

ஆகாயத்தையும்

மலையும்

மலைகளையும்

உலகு ஏழும்

ஏழுலகங்களையும்

ஒரு தார் ஆ

ஒருமாலையாக

நின்னுள்

தன்னுள்ளே

ஒடுக்கிய

(ஒருமூலையில்) அடங்கச் செய்து கொண்ட

நின்னை அல்லால்

உன்னைத்தவிர

வரு தேவர் மற்று உளர் என்று

(நான் ஆச்ரயணீயன் என்று சொல்லிக்கொண்டு) வரக்கூடிய தேவதைவேறொன்று இருப்பதாக

என் மனத்து

என்னெஞ்சிலே

இறையும்

சிறிதும்

நான் கருதேன்

நான் நினைத்தறியேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “அங்கண்ஞாலமுண்டபோது வெள்ளி வெற்பு அகன்றதோ” என்றபடி கைலாஸ கிரியுமுட்பட எல்லாவற்றையும் பிரளயகாலத்தில் திருவயிற்றில் கொண்டிருந்த உன்னைத் தெய்வமாக நினைப்பேனோ, அன்றி, உன்திருவயிற்றில் ஒடுங்கியிருந்து பின்பு வெளிவந்த எச்சில்களைத் தெய்வமாக நினைப்பேனோ என்கிறார்ப்பாட்டால்.

‘ஒரு தாரா’ என்பதை விளியாகவுங் கொள்ளலாம்; (ஆச்ரிதாக்ஷணத்துக்கு இட்ட) தனிமாலையையுடையவனே! என்றபடி.

 

English Translation

O Lord residing in kannapuram! The ocean, the sky, the mountains, the seven continents, -all within a trice you swallowed and placed within yourself.  My heart does not the slightest dwell upon other gods who appear before me: I seek but you alone!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top