(1730)

(1730)

விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற

படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,

மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்

றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ?

 

பதவுரை

அன்று

முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக)

ஏழ்விடை

ஏழு ரிஷபங்களை

வெகுண்டு

சீறிக்கொண்டு

அடர்த்து

வலியடக்கினவனும்,

விலங்கல்

த்ரிகூடபர்வதத்தில்

உற

சென்று சேரும்படியாக

படையால்

(வாநர) ஸேனைகளைக்கொண்டு

ஆழி

ஸமுத்ரத்தை

தட்ட

அடைத்தவனும்,

பரமன்

எல்லாரினுஞ் சிறந்தவனும்

பரம் சோதி

சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும்

மடை ஆர்

மடைகளெங்கும் நிரம்பிய

நீலம்

நீலோற்பல மலர்கள்

மல்கும்

வியாபித்திருக்கப் பெற்ற

வயல்

கழனிகளாலே

சூழ்

சூழப்பட்ட

கண்ணபுரம் ஒன்று

திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை

உடையானுக்கு

(இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு

அடியேன்

சேஷபூதனான நான்

ஒருவர்க்கு

வேறுசிலர்க்கு

உரியேனோ

உரிமைப்படுவேனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விலங்கலுறப் படையாலாழிதட்ட பரமன் = ஆழி விலங்கலுறப் படையால் தட்ட பரமன் என்றும் அந்வயித்து உரைப்பார்.  ஆழி ஸ்ரீ ஸூர்யனானவன், விலங்கல் உற – (அஸ்தமன) பர்வதத்தில் சேர்ந்து விட்டானென்னும்படி, படையால் – சக்கரப்படையினால், தட்ட – மறைத்த – என்று பொருள் காண்க.

 

English Translation

Then in the yore the Lord killed seven angry bulls.  He gathered a monkey army and mode a bridge over the ocean strait.  He is a body of effulgence.  He is the resident of kannapuram with fertile fields and water tanks filled with blue lotus.  Having become his devotee, will bow to anyone else?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top