(1728)
கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,
எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்
அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
பதவுரை
|
மானம் கை மதம் யானை |
– |
நீண்ட துதிக்கையையுடையதும் மதங்கொள்ளுமியல்வுடையதுமான கஜேந்திரனுடைய |
|
இடர் |
– |
துயரத்தை |
|
தீர்த்த |
– |
போக்கியருளின |
|
கரு முகிலை |
– |
காளமேகம் போன்றவனும் |
|
மை |
– |
மைபோன்ற நிறத்தையுடைய |
|
மானம் மணியை |
– |
பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும் |
|
அணி கொள் மரதகத்தை |
– |
அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும் |
|
எம்மானை |
– |
எமக்கு ஸ்வாமியும் |
|
எம்பிரானை |
– |
எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும் |
|
ஈசனை |
– |
ஸர்வேச்வரனும் |
|
எம் மனத்துள் அம்மானை |
– |
என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை |
|
அடியேன் அடைந்து |
– |
அடியேன் ஆச்ரயித்து |
|
உய்ந்து போனேன் |
– |
உஜ்ஜீவித்துப் போனேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அணி கொள் மரதகத்தை = பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரதகப்பச்சையையும் உவமை கூறுவதுண்டு “பச்ச மாமாலை போல் மேனி” என்ற திருமாலையுங்காண்க; காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் இவ்வுவமையினால் தொனிக்கும்.
English Translation
The dark-cloud Lord who rescued the elephant in distres is a dark precious gem, a beautiful emerald. He is my Lord, my Master, and Lord of the Universe. He resides in my heart as well, Attaining him I have found elevation of spirit.
