(170)

(170)

மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த

முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணை மேல்வைத்து

பின்னேயிருந் துகுழல் வாராய்அக் காக்காய்

பேரா யிரத்தான்குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

முன்

வாமநாவதாரகாலத்தில்
மன்னன்தன்

அஸுரராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்

மனைவியர்கள்
கண்டு

(தன்னுடைய) வடிவைக்கண்டு
மகிழ்வு எய்த

மகிழ்ச்சி யடையும்படி

(மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன்நான் மாவலி)’  என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்)

இ உலகினை முற்றும்

இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்

அளந்துகொண்ட இவனுடைய
பொன்முடியினை

அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து

புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து

(இவனது) பின்புறத்திலே இருந்துகொண்டு

குழலவாராய்!- அக்காக்காய்!-

பேர் ஆயிரத்தான்

ஸஹஸ்ரநாமங்களையுடைய இவனுக்கு

குழல்வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லா இந்திரியங்களையும் ஆகர்ஷிக்கவல்ல வாமநவடிவையும், பிரமசாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும் – மழலைச் சொல் சொல்லும்  அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனராம்.  பொன்னின் = இன் – சாரியை.  பூ அணை – புஷ்பம்போல் ம்ருதுவான படுக்கை யென்றுமாம்.

English Translation

Long ago when he came as a beautiful manikin, the wives of King Bali were pleased to see him. Then he grew and measured the whole Universe. He has a thousand names. O Raven, rest his golden locks on a flowery support and comb it from behind, come and comb his hair.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top