(1434)
வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே,
பதவுரை
|
தான் |
– |
யசோதை நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாகிய தான் |
|
வெண்ணெய் அமுது செய்ய |
– |
வெண்ணெயை (அளவில்லாதபடி திருடி) உண்டவளவிலே |
|
ஆய்ச்சி |
– |
யசோதையானவள் |
|
வெகுண்டு |
– |
சீற்றங்கொண்டு |
|
மத்து ஓச்சி |
– |
தயிர்கடையும் மத்தினால் அடிப்பதாக ஓங்கி |
|
கண்ணி ஆர் குறுகயிற்றால் கட்ட |
– |
முடிச்சுகள் நிறைந்த சிறிய தாம்பினால் கட்டிவைக்க |
|
வெட்டென்றிருந்தான் |
– |
இசைந்திருந்தவனும்:- |
|
திண்ணம் மா மதிள்கள் சூழ்ந்த |
– |
திடமான பெரிய மதிள்களாலே சூழப்பட்ட |
|
தென் திருப்பேருள் |
– |
தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிறவனும் |
|
வேலை வண்ணனார் |
– |
கடல்போன்ற நிறத்தையுடையனுமான பெருமானுடைய |
|
நாமம் |
– |
திருநாமங்களை |
|
நாளும் |
– |
நாள்தோறும் |
|
வாய் மொழிந்து |
– |
சொல்லி |
|
உய்ந்த ஆறு ஏ |
– |
நான் உஜ்ஜீவித்தபடி என்னே!- |
English Translation
The Lord appeared as Krishna, ate butter and incurred the wrath of his mother, who took the chaurning rope and bound him to a mortar. He resides amid strong-walled Ten-Tirupper, he is our ocean-hued Lord. How easily have I attained him through chanting his names!
