(1359)
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம்தே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே!
பதவுரை
|
செறும் திண்திமில் ஏறு |
– |
மேல் விழுவனவாய் திடமான முசுப்புக்களையுடையனவான ரிஷபங்கள் |
|
உடைய |
– |
பங்கமடைய, |
|
பின்னை பெறு தண் கோலம் |
– |
நப்பின்னைப் பிராட்டியினுடைய பெறுதற்கு விரும்பத்தகுந்ததான அழகிய திருமேனியை |
|
பெற்றார் |
– |
(ஏறுதழுவி) மணஞ் செய்து கொண்ட பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
நறு தண் தீம் தேன் உண்ட வண்டு |
– |
மணம்மிக்கதாய் குளிர்ந்ததாய் இனிமையான தேனைப் பருகின வண்டுகள் |
|
குறிஞ்சி பாடும் |
– |
குறிஞ்சிப் பண்ணைப்பாடப் பெற்ற |
|
கூடலூர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஏறு உடைய பின்னை = ரிஷபங்களை யுடையளான நப்பின்னை என்றதாகக் கொண்டு, ரிஷபங்களின் வலியடக்குதலைத் தனக்கு சுல்கமாகவுடைய நப்பின்னை என்னவுமாம்.
கோலம் – அழகுக்கும் உடம்புக்கும் பெயர்.
மூன்றாமடியில் ‘தண்டீன்’ என்று பலரும் ஓதுவது பொருந்தாது. ‘தண்டீம்’ என்றே ஓதுக. தண் + தீம், தண்டீம். தீம் – இனிமை
English Translation
Krishna received the beautiful Nappinnal as a prize for his subduring the seven bulls in a fight, He resides in Kudalur where bees drink fragrant nectar and sing kurinji panns.
