(1319)

(1319)

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,

வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,

செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,

பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.

 

பதவுரை

பஞ்சி அன்ன மெல் அடியாள்

பஞ்சுபோன்று மென்மையான பாதங்களையுடைய என்மகளானவள்,

கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும்

கம்ஸனால் ஏவப்பட்ட கடூரமான கோபத்தையடைய (குவலயா பீடமென்னும்) யானையைத் தொலைத்த இளையோன் என்று சொல்லிக்கொண்டும்,

வஞ்சம் மேவி வந்த பேயின்

கபடத்தை மேற்கொண்டு வந்த பூதனையினுடைய

உயிரை உண்ட மாயன் என்றும்

பிராணனை முடித்த ஆச்சரியசக்தியுக்தன் என்று சொல்லிக்கொண்டும்,

செம் சொலாளர் நீடு நாங்கை

செம்மையான சொற்களைக் கற்ற அந்தணர் நீண்டகாலமாக வாழப்பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற

தேவதேவன் என்று என்று ஓதி

தேவாதிதேவன் என்று பல கால் சொல்லிக்கொண்டும.

பார்த்தன்பள்ளி பாடுவாள்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பஞ்சியன்ன – பஞ்சி – பஞ்சு; போலி

 

English Translation

“Crue! Kamsa’s Killer-elephant’s killer lord, -O, Bull-spirited!” “Wonder-Lord who drank the milk and took the life of Ogress, pretty!” Deva-deva, Lord of Nangai living amidst the Vedic seers!’ How my cotton-tender-footed daughter sings of parttan-Palli, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top