(1202)
வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த
தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே.
பதவுரை
|
ஓ மண் அளந்த தாளாளா |
– |
பூமியை யளந்துகொண்ட திருவடிகளை யுடையவனே! |
|
ஓ தண் குடந்தை நகரி ஆளா |
– |
குளிர்ந்த திருக்குடந்தையை ஆளுமவனே! |
|
ஓ வரை எடுத்த தோன் ஆனா |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்த திருத்தோள்களே யுடையவனே! |
|
வாள் ஆய கண் பனிப்ப |
– |
வாள்போன்ற (எனது) கண்கள் நீரைப்பெருக்கவும் |
|
மெல் முலைகள் பொன் அரும்ப |
– |
மெல்லிய முலைகளில் நிற வேறுபாடு தோன்றவும் |
|
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு என்தனத்கு |
– |
நாள்தோறும் உன்னையே நினைத்துக்கொண்டு மனம் தளர்கின்ற எனக்கு |
|
ஓர்துணையாளன் ஆகாய் |
– |
நீ சிறந்த துணைவனாக வேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ் நான்கு பாசுரங்களும் தாது விடுவனவாய்ச் சென்றன. வயலாலி மணவாளனையே இடைவிடாது நெஞ்சில் பாவனை செய்துகொண்டிருந்ததனால், அவன் கண்முன்னே வந்து தோற்றுகிறனாகக்கொண்டு அவனோடு நேரே வார்த்தை சொல்லுவதாகச் சில பாசுரங்கள். பிராட்டி அசோகவனத்தில் திருவடியை நோக்கிப் பெருமாளுக்குத் தாதுமொழிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது இடையிலே பெருமாளையே ஸம்போதநம் பண்ணி ‘நாதா! என் விஷயத்தில் சிறிது அபராதம் பண்ணின காகத்தின் விஷயத்தில் உன் பராக்கிரமத்தைப் பெரிதாகக் காட்டினாய்; அபராதம் அடியோடு பிரித்துக் கொணர்ந்து சிறைவைத்திருக்கின்ற மஹாபாபியான இராவணன்மேல் பொறுமை பாராட்டி நிற்கின்றாய்; இஃது என்ன? என்றிப்படிப்பட்ட சில வார்த்தைகளை முன்னிலேயாகவே சொன்னதுபோல இப்பரகால நாயகியும் வயலாலி மணவாளளே முன்னிலையாக்கிச் சில பாசுரங்கள் பேசுகிறாள்.
மென்மூலங்கள் பொன்னரும்ப = முலைகளின் நிறம் வேறுபட்டுப் பசலை பூத்திருப்பதைப் பொன்னரும்யிருப்பதாகச் சொல்லுகிறது. ஆழ்வார்ஸ்திரி பாவனையை மானஸிகமாக ஏறிட்டுக்கொண்டாலும் மார்பில் மெய்யே முலைகள் முளைக்கமாட்டாவே, அப்படியிருக்க “மென்முலைகள் பொன்னரும்ப”என்று சொல்லுவது எங்ஙனே? என்று சங்கிக்கக்கூடும். நாயகனை அதுபவிப்பதற்கு முலை ஸாதநமாயிருப்பதுபோல எம்பெருமானே அறுபவிப்பதற்கு பக்தி ‘மென் முலைகள் பொன்னரும்ப’ என்றது-எம்பெருமானை அநுபவித்து மேன்மை பெறவேண்டிய என் ஆசையானது அவ்வநுபவங் கிடையாமையாலே பாழாய்ப்போக என்றபடி.
“ஓ மண்ணளந்த தாளாளா!” என்று தொடங்கி மூன்று லோகங்கேட்க விளிக்கிறார். ‘ஓ’ என்பதை ஒவ்வொரு விளியோடுங் கூட்டுக. ஒருவரும் அபேக்ஷயாதிருக்க எல்லார்தலையிலும் திருவடியைக் கொண்டுபோய் வைத்தவனன்றே நீ. அக்காலத்தில் இழந்தவர்களுக்கும் இனிமை பயக்கிறேமென்று திருக்குடந்தையில் திருக்கண்வளருமவனன்றோ நீ; இடக்கை வலக்கை யறியா தவர்களையும் வாயில்லாச் சீவன்களையும் மலையெடுத்து மழைதடுத்துக் காத்தவனன்றோ நீ; இவ்வளவு குணசாலியாயிருந்து வைத்து என்னொருத்திக்கேயோ வேம்பாகவேணும் என்கிறாள்.
என்றனக்கு ஓர் துணையாளனாகாய்-கோவாத்தனமலையாகிற பெருஞ்சுமையைத் தாக்கி நின்றாயென்பது ஒரு பெருமையல்ல; என்னுடைய ஆற்றாமையிலே சிறிதளவாகிலும் உன்னால் சுமக்கமுடியுமா பாராய் பிரானே! என்கிறாள் போலும்.
English Translation
O, The feet that measured the Earth, O, The ruler of Kudandai! O, The arms that held a mountain high, come and be my sweet companion. My spear-like-beauty-eyes rain with tears, my tender breasts have lost their colour. Everyday I think of you alone, O, When will you come to my arms!
