(1171)

(1171)

வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,

தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண,

முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட,

திலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே.

 

பதவுரை

வளை கை நெடுங் கண் மடவார்ஆய்ச்சியர்

வளையல்களணிந்த கைகளையும் நீண்ட கண்களையுமுடைய இடைப்பெண்கள்

அஞ்சி

பயப்பட்டு

அழைப்ப

(‘காளிங்க மர்த்தனமாகிற இந்த பயங்கரமான செய்தியை வந்து பாருங்கள்’ என்று) அழைக்க,

அண்டர்

இடையர்கள்

தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம்புக்கு

மலர்ந்த தாமரைப் பூக்களையுடைய வொரு பொய்கையின் குளிர்ந்த கரையிலே சென்று

காண

பார்த்தவளவிலே

முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில்

முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே

நின்று

நின்று கொண்டு

அது வாட திளைத்து

அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து

அமர் செய்து

உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான்

சித்திரகூடத்து உள்ளான்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தவளத் தமிழ் தாமரைப் பொய்கை தளைத்து அவிழ் – கட்டுண்டிருந்து (பிறகு) அவிழ்ந்த ” என்று பொருளாய் விகஸிந்தபடியைச் சொல்லிற்றுகிறது. தாமரைகள் புஷ்பிக்கக்கூடிய பொய்கை என்று கருத்து, இப்படிப்பட்ட பொய்கையையன்றோ காளியன் தன் விஷாக்கியினால் கொதிப்பித்துக் கொண்டு கிடந்தானென்கை, தடம் – வடசொல்  கரை.

 

English Translation

The fair-bangled wide-eyed cowherd dames wailed in concern when the Lord entered the cool waters of the lotus-lake and, -watched by all, -danced over the hoods of the poison fanged serpent. The mischief maker resides in Tillai Tiruchitrakudam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top