(1155)
விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே.
பதவுரை
|
விரை கமழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில் இறுத்து |
– |
பரிமளம் வீசுகின்ற மெல்லிய கறுத்த கூந்தலையுடையளான பிராட்டிக்காக வில்லை முறித்தவனும், |
|
அடல் மழைக்கு நிறை கலங்கிட |
– |
அஸஹ்யமான பெருமழை வந்தபோது ஆநிரைகள் பரிதபித்து நிற்க |
|
வரை குடை எடுத்தவன் |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துக் காத்தவன் |
|
நிலவிய இடம் |
– |
மகிழ்ந்து உறையும் இடமாவது; |
|
தடம் ஆர்வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு |
– |
தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகுசெய்து விளங்குகின்ற மதயானைகளையுடைய |
|
மருப்பொடு |
– |
தந்தங்களையும் |
|
திரை உந்தி கொணர்ந்து அணை |
– |
அலைகளினாலே தள்ளிக் கொண்டுவந்து சேருகிற |
|
செழு நதி |
– |
அழகிய ஆறு |
|
வயல் புகு |
– |
கழனிகளில் பாயப்பெற்ற |
|
திரு அயிந்திரபுரம்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (தடமார்வரைவள மித்யாதி) ஆறுகள் பெரு வெள்ளமாய்ப் பெருகும்போது யானைத் தந்தங்களையும் அகில் மரங்களையும் மற்றும் பலப்பல மணிமாணிக்கங்களையும் கொழித்துக்கொண்டு வருகிற வழக்கமாகையாலும் அங்ஙனமே கவிகளும் கவிபாடுகிற வழக்கமையாலும், இங்கே கருடநதி ப்ரவஹிக்கும்படியை வருணிக்கிறாராயிற்று.
English Translation
The Lord who broke a bow for the sake of the dark tressed Sita, and who lifted the mountain to protect the cows against a storm resides in Tiruvayindirapuram where rivers flowing through the mountains and forest, bring elephant tusk and fragrant Agil wood as offering, then irrigate the fields.
