(1595)

(1595)

வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்

நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,

பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்

அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.

 

பதவுரை

பஞ்சி அன்ன மெல் அடி

பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய

நல் பாவைமார்கள்

நல்ல ஸ்திரீகளினுடைய

ஆடகத்தின் அம் சிலம்பின்

பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான

ஆர்ப்பு

ஆரவாரமானது

ஓவா

இடைவிடாதிருக்கிற

அணி ஆர் வீதி அழுந்தூர்-

வஞ்சி

வஞ்சிக்கொடிபோன்ற

மருங்குல் இடை

இடுப்பானது

நோவ

நோகும்படியாக

மணந்து நின்ற

ஸம்ச்சேஷித்து நின்ற

கனவகத்து

கனவிலே

என் நெஞ்சு நிறையா

எனது நெஞ்சு நிறையுமாறு

கை கூப்பி

நான அஞ்ஜலி செய்யப்பெற்று

நின்றார்

நின்று கொண்டிருந்தவர்

நின்ற

நித்யவாஸம் பண்ணுகிற

ஊர் போலும்

திவ்யதேசமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுவும் ஆழ்வார் நாயகி ஸமாதியால் பேசும் பாசுரம்.  கனவிலே வந்து கலந்து பிரிந்து போனவர் மற்றுள்ள அன்பரோடும் 1. நனவிலே கலவிசெய்ய வந்து நிற்கிறவிடம் திருவழுந்தூர்.

வஞ்சிமருங்குலிடைநோவ = பெண்டிருடைய இடைக்கு வஞ்சிக்கொடியை உவமை சொல்வது கவிமரபு.  இடை நோவ மணந்து நின்றானென்றதனால் பூர்ணஸம்ச்லேஷம் நடந்தமை தோன்றும்.  ‘மருங்குல்’ என்றாலும் ‘இடை’ என்றாலும் இடுப்புக்கே பெயர்; இரண்டு சொற்களையும் சேரப் பிரயோகித்தது தமிழ் வழக்கு. கைகூப்பி – எச்சத்திரிபு.

அங்குள்ள மாதர்கள் பொன்மயமான நூபுரங்களைக் காலிலணிந்து கொண்டு நர்த்தனம் பண்ணா நிற்பர்கள்; அதனாலுண்டான ஆரவாரம் ஓயாதிருக்கு மென்கிறது பின்னடிகளில்.

பஞ்சி – பஞ்சு! போலி.  பாவைமார் – பதுமைபோல அழகியவர்கள்; உவமையாகுபெயர்.  ‘ஹாடகம்’ என்னும் வடசொல் ஆடகமெனத் திரிந்தது.

1. நனவு – கனவுக்கு எதிர்த்தட்டு; ப்ரத்யக்ஷம்.

 

English Translation

Cotton-soft-tender-feet-damsel’s dancing bells never cease ringing in Alundur, laid out with beautiful streets, It is the residence of the Lord who blended with me in my dream-state making my creeper-slender waist with in pain, and I stood with folded hands, fully satisfied.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top