(1583)
பண்டேன மாயுலகை யன்றிடந்த பண்பாளா என்று நின்று,
தொண்டானேன் திருவடியே துணையல்லால் துணையில்லேன் சொல்லு கின்றேன்,
வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை எம்பெருமா னடியார் தம்மை,
கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் கண்ணிணையும் களிக்கு மாறே.
பதவுரை
|
பண்டு அன்று |
– |
முன்பொருகால் |
|
ஏனம் ஆய் |
– |
மஹாவராஹரூபியாய் |
|
உலகை |
– |
பூமியை |
|
இடந்தா |
– |
கோட்டாற் குத்தியேடுத்துவந்த |
|
பண்பாளா |
– |
குணசாலியே! |
|
என்று நின்று |
– |
என்று சொல்லி நிலைநின்று |
|
தொண்டு ஆனேன் |
– |
(உனது திருவடிகட்கு) அடிமை யானேன்; |
|
திரு அடியே துணை அல்லால் |
– |
(உனது) திருவடிகளே துணை யாவதன்றி |
|
துணை இலேன் |
– |
வேறு துணையுடையேனல்லேன்; |
|
சொல்லுகின்றேன் |
– |
இ சத்தியம்; |
|
வண்டு ஏந்தும் |
– |
வண்டுகளைத் தரிக்கின்ற |
|
மலர் |
– |
பூக்களையுடைய |
|
புறவில் |
– |
தோப்புகளை யுடைத்தான |
|
வண் சேறை |
– |
அழகிய திருச்சேறையிலுள்ள |
|
எம்பெருமான் |
– |
ஸாரநாதப் பெருமாளுடைய |
|
அடியார் தம்மை |
– |
பக்தர்களை |
|
கண்டேனுக்கு என் நெஞ்சும் |
– |
ஸேவிக்கப்பெற்ற எனது மனமும் |
|
கண் இணையும் |
– |
இரண்டு கண்களும் |
|
களிக்கும் ஆறு |
– |
களிக்கும் விதம் |
|
இது காணீர் |
– |
இதோ பாருங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முன்பு வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹாவராஹ மூர்த்தியாய், அண்டபித்தியிலே சேர்ந்திருந்த பூமியை அதில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்துக் கொணர்ந்த நீர்மையை யுடையவனே! என்று இடையறாதே சொல்லிக்கொண்டு அந்நீர்மையிலே தோற்று உனது திருவடிகளே எனக்குத் தஞ்சம்; வேறொரு புகலை உடையேனல்லேன்; இங்ஙனே ஆணையிட்டுச் சொல்லக்கடவேன். இப்படி திண்ணிதாக அடியேன் விண்ணப்பஞ்செய்வது எது கொண்டென்னில்; வண்டுகள் மாறாத பசுமலரையுடைத்தான சோலைகளாற் சூழப்படட் திருச்சேறையிலெழுந்தருளியுள்ள பெருமாளுடைய அடியார்களை ஸேவித்த மாத்திரத்தில் என்னுடைய நெஞ்சும் கண்களும் களித்கிறபடியைக் காணுங்கோள்; இவ்வளவு பரிபாசம் பெற்றேனான பின்பு அந்த அத்யவஸாயம் திடமாயிருக்கத்தட்டுண்டோ வென்கிறார்.
English Translation
O Lord who came in the yore as a bear and lifted the Earth! Other than the refuge of your lotus feet, I have no refuge, I declare. Having seen your devotees in Ticcherai amid bee-huming groves, see the way, my heart and my eyes rejoice!
