(12)

(12)

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்

வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்

நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று

பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.

 

பதவுரை

பவித்திரனை

பரிசுத்தனும்
பர மேட்டியை

பரமபத நிலயனும்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை

ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை                                            அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன்

ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார்
விரும்பிய சொல்

ஆதரத்தோடு சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை,
நல் ஆண்டு என்று

நமக்கு நல்ல காலம் வாய்த்ததென்று (மகிழ்ந்து)
நவின்று உரைப்பார்

ஸர்வதா அநுஸந்திப்பவர்கள்
பரமாத்மனை

ஸ்ரீமந்நாராயணனை
சூழ்ந்து இருந்து

சுற்றும் சூழ்ந்துகொண்டு

(நமோ நாராயணாய என்று. . . )

பல்லாண்டும்

எப்போதும்
பல்லாண்டு ஏத்துவர்

மங்களாசாஸநம் பண்ணப்பெறுவார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன் விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள் மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.

பவித்திரன் – தான் பரிசுத்தனாயிருப்பதோடு அபரிசுத்தர்களையும் பரிசுத்த ராக்கவல்லவன் பரமேஷ்டீ என்னும் பரமேட்டியெனத் தெரிந்தது.  மிகச்சிறந்த ஸ்தானத்தில் வாழ்பவன் என்று பொருள்.  சார்ங்கம் என்பது (வடமொழியில்) வில்லுக்குப் பொதுப் பெயராயிருந்தாலும், பெருமானுடைய திருவில்லுக்குச் சிறப்புப் பெயருமாம் ‘‘வில் ஆண்டான்’’ என்ற சொல்லாற்றலால் -‘சத்துரிக்களைக் காட்டு, காட்டு’ என்று விம்மிக் கிளம்புகின்ற வில்லை அடக்கியாள்பவன் எம்பெருமான் என்பது விளங்கும்.

வில்லிகண்டார் என்பவர்களில் மூத்தவனான வில்லி என்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதிய நகரமாகையால் வில்லிபுத்தூரென்று திருநாமம்; வில்லி யென்பவன் புற்றில்நின்றும் வடபத்ரசாயிப் பெருமாளைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த திவ்யதேசமென்று இதனை வில்லி புற்றூர் என்றுங் கூறுகின்ற்னர்.  வடமொழியில் ஸ்ரீதந்விநவ்யபுரம் எனப் பெரும்பான்மையாகவும் ஸ்ரீத்ந்லிவல்மீகபுரம் எனச் சிறுபான்மையாகவும் வழங்கப்பெறும்.

விட்டுசித்தன் –  விஷ்ணுவை சித்தத்திலே உடையவர் என்று பொருள்.  மற்ற ஆழ்வார்களுடைய சித்தத்திலும் எம்பெருமான் எழுந்தருளியிருந்தாலும் ‘‘அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும், அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத் திரைபலமோதப் பள்ளி கொள்கின்ற பிரானை’’ என்றும் ‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்றும் இவ்வாழ்வார்தாமே பேசிக்கொள்ளும்படியாக எம்பெருமான் குடும்பத்தோடே வந்து நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஏற்றம் இவ்வாழ்வார் திருவுள்ளத்திற்கே அஸாதாரணமென்றுணர்க.

 

English Translation

These words were uttered with love by Villiputtur’s Vishnuchitta, wishing ‘Pallandu’ for the pure Lord, the large-hearted one, wielder of the Sarnga bow.  Those who enjoy singing this surround the Lord at all times chanting ‘Namo Narayanaya’, for them too, this god year Pallandu.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top