11 தாம் உகக்கும்

(607)

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ

யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்

தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்

ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

விளக்க உரை

(608)

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்

குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்

எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

விளக்க உரை

(609)

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்

அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்

செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்

எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே

விளக்க உரை

(610)

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற

பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்

இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

விளக்க உரை

(611)

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று

எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்

இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

விளக்க உரை

(612)

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே

விளக்க உரை

(613)

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து

பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்

திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்

எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே

விளக்க உரை

(614)

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

விளக்க உரை

(615)

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்

திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து

அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த

பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

விளக்க உரை

(616)

செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்

தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top