சீரார் சிரமறுத்து செற்றுதுகந்த செங்கண்மால்
போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை (2691)
சீரார் திருமார்ப்பிம் மெல்கட்டி செங்குருதி
சோரா கிண்டந்தனை குங்குமத்தாள் கொட்டி
ஆரவெழுந்தன் அரியுருவாய் அன்றியும் (2692)
பதவுரை
|
பேர் ஆர் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை |
– |
(எப்போதும) யுத்ததிலே பொருந்தியிருக்கிற நீண்ட வேலாயுதத்தையுடையனான ஹிரண்யனுடைய உடலை |
|
அரி உரு ஆய் |
– |
நரஸிம்ஹரூபியாகி |
|
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு |
– |
கூர்மை மிக்கு நெருங்கின திரு நகங்களாலே பிளந்து |
|
குடல் |
– |
அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து) |
|
சீர் ஆர் திரு மார்பின்மேல் மாலை கட்டி |
– |
அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு |
|
செம் குருதி சோரா கிடந்தானை |
– |
சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை |
|
குங்குமம் தோள் கொட்டி |
– |
குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு |
|
ஆரா எழுந்தான் |
– |
ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன், |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பொன் பெயரோன் –இது லக்ஷித லக்ஷணை, ஹிரண்யம் என்ற வடசொல் பொன் எனப் பொருள்படும்.
ஆரா –செய்யாவென்னும் வாய்பாட்டிறந்த காலவினையெச்சம், ஆர்த்து என்றபடி ஆரவாரஞ்செய்து.
