(3814)

(3814)

மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்

செய்யாள் திருமார்லினில்சேர் திருமாலே

செய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்

கையா உன்னைக்காணக் கருதுமென்கண்ணே.

 

பதவுரை

மை ஆர் கருகண்ணி

மையணிக் கருங்கண்களையுடையவளும்

கமலம் மலர் மேல்

தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான

செய்யாள்

சிவந்த நிறமுடைய பிராட்டி

திருமார்வினில் சேர்

திருமார்பிலே சேரப்பெற்ற

திருமாலே

ச்ரிய பதியே

வெய்யார்

ம்மை விஞ்சின

சுடர் ஆழி

ஒளிமிக்க திருவாழியையும்

அரி சங்கம்

அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும்

பந்தும்கையா

ஏந்தின திருக்கைகளையுடையவனே

என் கண்

எனது கண்களானவை

உன்னை காண கருதும்

உன்னைக் காண விரும்பாநின்றன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டே து பரே லோசே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.

மையார்கருங்கண்ணி = ஆச்ரயணகாலமென்றும் அநுபவகால மென்றும் இரண்டு மையங்களுண்டு;  ஆக்ரயண காலத்தில் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொள்ளவேணும் அநுபவ காலத்தில் அவளும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும்.  ஆக இரண்டு தசையிலும் பிராட்டியின் ஸம்பந்தம் அவர்ஜநீயமாயிருக்கையாலே மையத்திற்கு தகுந்தபடி உபயோகப்படுவதற்காகப் பிராட்டி நித்யோக முடையளாயிருப்பன்.  ஆச்ரயண காலத்தில் சேதநர்களைக் குற்றங்கண்டு சீறாமல் அங்கீகரிக்கச் செய்வதற்காக முதலிலே எம்பெருமானுக்கு உபதேசங்கள் செய்வள்.  அந்த வுபதேசங்கள் பவிக்கமாற் போமளவில் தன்னழகைக் காட்டி அதிலே அவனை யீடுபடுத்தித் தன்சொற்படி உடக்கச் செய்வேன். இவ்விஷயத்தை ஸ்ரீவசக பூஷணத்திலருளிச் செய்யுமிடத்து  “உபதேசத்தாலே மீளாதபோது …  ஊச்வரனை அழகாலே திருத்தும்” என்கிறார் பிள்ளை லோகாச் சாரியர். அவ்விடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள்–”ஈச்வரனை அழகாலே திருத்துகையவது–ஒங்ராண்போ, உனக்குப் பணியன்றோவிது” என்று உபதேசத்தை யுதறினவாறே கண்ணைப் பாட்டுதல் கச்சை நெகிழ்தல் செய்து தன்னழகாலே அவனைப் பிச்சேற்றித் தான் சொன்னபடி செய்ய நல்லது நிற்கமாட்டாதபடி பண்ணி அங்கீகாரோந் முகனாக்குகை என்றருளிச் செய்கிறார்.  ஆகவே நம்முடைய வாழ்ச்சிக்குப் பிராட்டியில் திருக் கண்களே மூலகாரணமாதலால் அக் கண்ணழகை முந்துறப் பேசுகிறார். ஸ்ரீராமாயணத்தில் ‘அஸிதேக்ஷணு’ என்று பவகானுஞ் சொல்லுகிறபடியே பிராட்டி இயற்கையாகவே கருங்கண்ணி மையிட்டுக் கருமை ஸம்பாதிக்க வேண்டியதில்லை.  ஆயினும் மங்கள ஈர்த்தமாகவே மையிடுகிறபடி.

கமல மலர்மேல் செய்யாள்– ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••  – பந்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் என்கிற ஸ்ரீஸூந்த வாக்யத்தை அப்படியே மொழி பெயர்த்தபடி காண்மின் தாமரைப் பூவிலிருந்தவள்

பாதாருந்துதமேவ பஞ்கஜாஜ என்று ஸ்ரீ குணரத்க கோசத்திலே பட்டர் அருளிச் செய்தபடியே அத்தாமரைப் பூவில் துகள் திருவடிக்கு உறுத்தினவாறே அதைவிட்டு எம்பெருமானுடைய திருமார்விலே சேரப் பெற்றாள்.  அது சொல்லுகிறது திருமார்வினில் சேர் என்று, திருமாலே–மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை என்று ஆண்டாளருளிச் செய்த படியே, பிராட்டியாலே தான் பிச்சேறி, தான் அவளைப் பிசெற்றுமவனென்கை.  இவ்வழகை யெல்லாங்காண ஆழ்வார் ஆசைப்படுகிறபடி.

கீழே பெரிய பிராட்டியாருடைய சேர்த்தியைச் சொன்னவுடனே திருவாழி திருச் சங்குகளின் சேர்த்தியை முன்றாமடியினாற் சொல்லுகையாலே இதிலிருந்து கண்ட ஒரு ரஸ விசேஷத்தை நம்பிள்ளை யருளிச் செய்கிறார் காண்மின்–”இவள் கையில் லீலாரவிந்தம் அவனுக்கு போக்யமாயிருக்குமா போலே போயிற்று அவன் கையில் திவ்யாயுதங்கள் இவளுக்கு இனிதாயிருக்கும்படி” என்று, இத்தால், பிராட்டி பூவேந்தி யிருக்குமாபோலே எம்பெருமான் ஆயுதவிசேவர்களை ஏந்தியிருக்கிறபடி என்றதாயிற்று.  ஏந்துங்கையா !  என்கையாலே வெறுந்திருக்கைகளை வெறுந் திவ்யாயுதங்களை மன்றிக்கே இரண்டுஞ் சேர்ந்த சேர்த்தியையே தாம் காண பட்டிருப்பது செரிவிக்கப்படதாயிற்று.

உன்னைக்காண–லசஷ்மீ ஸம்பந்தத்தோடு திவ்யாயு தங்களோடும் திவ்ய விக்ரஹத்தோடுங் கூடியிருக்கிற வுன்னைக் காண என்றபடி.  காண நானாசைப்படுகிறே வென்னாமல் என் கண் காணக்கருதும் என்றது – என்பசி கிடக்கட்டும் ப்ரஜையின் பசியைப் போக்குவாய் தாயே! என்று இரப்பாளர் சொல்லுமடையிலே அமைந்துள்ளது.

 

English Translation

Lord who sports the dame with dark eyes on his chest, Lord of conch and discus! My eyes pine to see you

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top