(3696)

(3696)

ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,

ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,

காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்

கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே.

 

பதவுரை

ஓர் முற்றா உரு ஆகி

மிகச் சிறு பிராயமான வடிவையுடையையாய்

ஞாலம் போனகம் பற்றி

ஜகத்தையெல்லாம் அமுது செய்து

ஆல் பேர் இலை

ஆலினுடைய மிகச்சிறிய இலையிலே

அன்னவசம் செய்யும் அம்மானே

கண் வளர்ந்தருளுகிற ஸ்வாமியே!

கார் எழில்

காளமேகம் போன்றழகிய

உன் கோலம்

உனது வடிவழகை

காணல் உற்று

காணவேணு மென்றாசைப்பட்டு

ஆழும்

அதிலே ஆழங்காற்பட்டிருக்கின்ற

கொடியேற்கு

கொடியேனாகிற எனக்கு

பேர்வது ஓர் காலம்

நிகழ்கிற ஒரு க்ஷணாவகாச மானது

கார் இருள் ஊழி ஒத்து உளது

காடாந்தகாரம்மிக்க கல்பம் போலே நீள்கின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் * வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை * என்று அஞ்சினவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! நம்மைப்பற்றி நீர் அஞ்சவேண்டுமோ! நம்முடைய ஸர்வரக்ஷகத்வம்பெருமையை நீ அறியீரோ? என்று அப்பெருமையைக் காட்டிக் கொடுத்தான், (அதாவது) வடதளசாயி விருத்தாந்தத்தை நினைப்பூட்டினான், அதை யநுஸந்தித்துத் தம்முடைய தவளர்ச்சியை விண்ணப்பஞ்செய்கிறார் இதில்.

ஞாலம் போனகம் பற்றி – ஆவிலையமர்ந்த பெருமானுக்கு உலகம் முழுவதும் உணவாயிற்று, இது நமக்கு ஸாத்மிக்குமா ஸாத்மியாதா? என்று கூட ஆராயாமல் பூமிப்பரப்பையெல்லாம் வயிற்றிலே எடுத்து வைத்துக்கொண்டமைக்கு வயிறெரிகிறார். அதற்கு “பாலன் தனதுருவாய் எபுலண்டு“ என்றதாயிற்று. அதற்குமேலே ஆலம் பேரிலை அன்னவசஞ்செய்யும்மமானே! – பேரிலை என்றது எதிர்மறையிலக்கணையால் சிறிய இலை என்று வருமுறக்கத்திற்கு அன்னவச மென்று பெயர். கையமேழையுமுண்ட ஆயாஸத்தினால் திருக்கண்வளர்ந்தருள நினைத்தால் விசாலமானதோரிடத்தைக் கற்பித்துக் கொண்டு அதிலே * தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி * என்னும்படியே விசாலமாகக் கண்வளர்ந்தருளலாகாதோ? மிகச்சிறியதாய் முகிழ்விரியாத்தான ஆலந்தளிரிலேயோ கிடப்பது? சரிந்து விழுந்தால் அந்தோ! என்னாகும்? என்று வயிறு பிழக்கிறார்.

அன்னவசஞ் செய்யு மென்றவிடத்து ஈடு, – “உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளும், யசோதைப் பிராட்டி தொட்டில் பண்ணும் வ்யாபார மெல்லாம் பண்ணுமாயிற்று அதுக்குள்ளே.“

இனி, பின்னடிகளால் தம்முடைய அச்சமிகுதியை விவரிக்கிறார். காரெழில் உன்கோலம் காணுலுற்று ஆழும் கொடியேற்கு, பேர்வதோர் காலம் காரிருள் ஊழியொத்துள்ளதால் என்று அந்வயிப்பது. மங்களாசாஸனம் பண்ணுகைக்கு உனது அழகிய வடிவைக்காண ஆசைப்பட்டு அது பெறாதே நோவுபடுகிற மஹாபாபியானவெனக்கு ஒரு க்ஷணகாலமும் கல்பகோடிஸஹஸ்ரமாக நெடுகாநின்றது காண்! என்கை. ஆறாயிரப்படி, – “ஓர் முற்றாவுருவாய் அந்தப்பிள்ளைத் தனத்தாலே ஸர்வ லோகங்களையும் அமுது செய்து, பெரிய வெள்ளத்திலே சிறியதோராலிலையிலே, யசோதைப்பிராட்டியைப் போலே யிருப்பாளொரு தாயாருமின்றியே  தனியே கண்வளர்ந்தளுகிற தசையிலே துணையாயிருக்கப் பெறாமையாலும் உன் வடிவழகை. காணவாசைப்பட்டுப் பெறாமையாலும் அகாதமான துக்கார்ணவத்திலே நிமக்நனாயக் கிடக்கிற வெனக்கு ஒரு க்ஷணமானது அந்தகாரமயமான ராத்ரி யுகமாய்ச் செல்லுகிறதென்கிறார்.“

 

English Translation

O Lord who swallowed the Earth as a “A devotee waits there longing for; morsel and slept like a child, floating on chance to go out with you bearing, fimoctrprivispslikeadarm your conch and discus”

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top