(3666)
நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே.
பதவுரை
|
மலர் சோலைகள் சூழ் |
– |
பூஞ்சோலைகள் சூழ்ந்த |
|
திருவாறன் விளை அதுவே நீள் நகரம் |
– |
திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்; |
|
நாள் நகரத்து |
– |
(அந்த) மஹாநாகரத்தில் |
|
உறைகின்ற பிரான் |
– |
நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய் |
|
நெடுமால் |
– |
வியாமோஹமுவீ;யனாய் |
|
கண்ணன் |
– |
ஸ்ரீ க்ருஷ்ணனாகத்திருவவதரித்தவனாய் |
|
விண்ணவர் கோன் |
– |
நித்யஸீரிகளுக்குத் தலைவனாய் |
|
வாணபுரம் புக்கு |
– |
பாணாஸுரனுடைய நகரிலே சென்று |
|
முக்கண் பிரான் தொலைய |
– |
சிலபிரான் பங்கமடையும்படி |
|
வெம் போர்கள் செய்து |
– |
கொடிய யுத்தத்தை நடத்தி |
|
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் |
– |
பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவான் எம்பெருமான் |
|
சரண் |
– |
(அந்தத் திருப்பதியையடைதற்கு) உபாயபூதன்; |
|
அன்றி மற்று ஒன்று இலம் |
– |
கீழ்ச் சொன்னவை தவிர ப்ராப்ய ப்ராபகங்களே யுடையோ மல்லோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில். இத்திருப்பதியின் சுவையை யறியாதார்க்கன்றோ பரமபதம் ப்ராப்யமாவது; இதன் சுவையறிந்தார்க்குப் பரமபதம் ஒரு பொருளாகத் தோன்றுமோ? இத்தலமேயன்றே பரமபதமாவது. எம்பெருமானுக்குங்கூட ப்ராப்யபூமி இதுவான பின்பு இவ்வர்த்தத்தில் ஸம்சயமுண்டோ? விரோதிகளைப்போக்கி இத்தலத்தில் வாஸத்தை யளிப்பதற்கு உபாயபூதன் அப்பெருமானேயாவன்.
அன்றி மற்றொன்றிலமே என்றவிடத்து ஈடு—“இங்ஙனல்லது ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக்கடவோமல்லோம்” என்று. என்பெருமானை பராப்யனாகக் கொண்டு அவனைப் பெறுதற்கு உபாயமாக இத்திருப்பதியைக்கொள்வர் சிலர்; அது தகுதியற்றதென்று ஆழ்வார் தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிட்டருளினாராயிற்று.
English Translation
The city of Tiruvaranvilal is surrounded by gardens. He resides there as Krishna, Lord of the celestials, in the yore he entered Sana’s fortress, -while Siva fled, -and cut asunder the Asura’s thousand arms, he is our only refuge
