(3639)
அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுதனே! அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே.
பதவுரை
|
அம் கள் மலர் தண்துழாய் முடி |
– |
அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய |
|
அச்சுதனே |
– |
எம்பெருமானே! |
|
அருளாய் நீ |
– |
அருளிச்செய்யவேணும்; |
|
திங்களும் ஞாயிறும ஆய் |
– |
சந்திரனும் ஸூர்யனுமாயும் |
|
செழு பல் சுடர் ஆய் |
– |
லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும் |
|
இருள் ஆய் |
– |
இருளாயும் |
|
பொங்கு பொழி மழை ஆய் |
– |
பொங்கிப் பொழியும் மழையாயும் |
|
புகழ் ஆய் பழி ஆய் |
– |
கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் |
|
பின்னும் |
– |
இன்னமும் |
|
வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை |
– |
க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள் |
|
என்ன விசித்திரம் |
– |
என்ன வேடிக்கை களோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் – அங்கண்மலர்த்தண்டுழாய் முடியச்சுதனே! என்று திங்களும் ஞாயிறுமாய் – “யதா ப்ரஹ்லாதநாச்சந்த்ர: ப்ரதாபாத் தபநோ யதா” என்றபடியே இருவர்க்கும் இரண்டு காரியங்கள் நியதங்களாயிருக்குமே; தாபத்தையாற்றுவதும் தாபத்தை விளைப்பதும். இவையிரண்டுமவனிட்ட வழக்கு. செழும்பல்சுடராய்-அவரவர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமைகளுக்கு ஸூசகங்களாய்க் கொண்டு ஸூசகங்களாய்க் கொண்டு நக்ஷ்த்திரங்கள் க்ரஹங்கள் முதலியவற்றுக்கும் நிர்வாஹகனென்றபடி. இருளாய்-சுடராயிருப்பவனும் தானே, சுடர்க்கு எதிரான இருளாயிருப்பனும் தானே. உலகில் ஒளியைத் தேடுவார் சில ரேயாவர்; இருளைத் தேடுமவர்களே பலராவர்; மாமுகர்க்கும் கள்ளர்க்கும் இருள் தேட்டமாயிருக்குமே; அன்னவர்கட்கும் உதவியாம்படி இருளாயிருப்பன்.
பொங்குபொழிமழையாய் – ஸகல ப்ராணிகளுக்கும் ஜீவிக்கலாம்படி பயிர்களை யுண்டாக்கி வளர்க்கும் மழையும் தானாயிருக்கும். புகழாய்ப்பழியாய் = தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றிலில் தோன்றாமை நன்று (திருக்குறள்) என்றபடி எல்லாரும் விரும்பக் கூடிய புகழும் தானாய், வேண்டாத பழியும் தானாய். வெங்கண் வெங்கூற்றமுமாய் – இவ்வுலகங்கள் அதிப்ரவ்ருத்தியில் கைவளர்ந்த போது குளிர நோக்குமது தவிர்த்து வெவ்விய நோக்கையுடைய யமன்போன்று. ஸம்ஹாரகனாய் யமனுக்கும் யமனாயிருக்கிறபடியைச் சொல்லுகிறது. உபநிஷத்தில் ம்ருத்யுர் யஸ்யோபஸேசநம் என்று ஓதிற்று. பகவானுக்கு யமன் ஊறுகாய் என்றது உலகி;ல் ஊறுகாயின் தன்மை எப்படிப்பட்டகென்று பார்க்கவேணும். ப்ரஸாதம் முதலியவற்றை உட்கொள்ளுவதற்கு பிறகு அது மிச்சப்பட்டிருந்தால் அதையுமெடுத்து உட்கொள்ளுகிறோம். இதுபோல ம்ருத்யுவைக் தருவயாகக்கொண்டு எல்லாவற்றையும் அந்தமடைவித்து, பிறகு ம்ருதபுதன்னையும் லய்மடைவிக்குந்தன்மை இதனால் தெரியவரும்.
இவையென்ன விசித்திரமே அருளாய் = இப்படி சேராச்சேர்ததியான பதார்த்தங்களெல்லாமுமாயிருக்கிற தன்மை மிக விசித்திரமாயிராநின்றது. இதனைத் தெரியவருளிச் செய்யவேணும்.
English Translation
Beautiful Tulasi-wreathed Lord, Achyuta! Pray tell me! You are the Moon, The sun, the stars, darkness and thundering rain. Great fame, blame, and the sinister-eyed god of death are also. you: what wonders are these?
