(3617)

(3617)

என்றுகொல் சேர்வதந் தோஅரன் நான்முக னேத்தும்,

செய்ய நின்திருப் பாதத்தை யான்நிலம் நீரெரி கால்,

விண்ணுயிர் என்றிவை தாம்முத லாமுற்று மாய்நின்ற எந்தாயோ,

குன்றெடுத் தாநிரை மேய்த்தவை காத்தவெங் கூத்தாவோ

 

பதவுரை

நிலம் நீர் எரி கால் விண்

பஞ்ச பூதங்களும்

உயிர்

பிராணிவர்க்கமும்

என்ற இவை தாம் முதல் ஆ

ஆகிய இவை முதலாக

முற்றும்

ஸகல பதார்த்தங்களும்

ஆய் நின்ற எந்தாய் ஒ

தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே!

ஆ நிரை மேய்தது

பசுக்களின் கூட்டங்களை மேய்த்து

குன்று எடுத்து அவை காத்த

கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின

எம் கூத்தா ஓ

குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே!

அரண் நான் முகன் ஏத்தும்

சிவனும் பிரமனும் துதிக்கும்படியான

நின் செய்ய திரு பாதத்தை

உனது சேவடியை

யான் சேர்வது என்று கொல்

யான் சேரப் பெறுவது எந்நாளோ?

அந்தோ

ஜயோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மீண்டும் அதுவே வாய்வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே; அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார். திருவடிக்கு ‘அரண் நான்முகனேத்தும்’ என்ற அடைமொழி கொடுத்தது அவர்கள் துதிப்பதனால் திருவடிக்கு ஒரு பெருமை என்கைக்காகவன்று; அழிப்பதும் ஆக்குவதுமே தொழிபாயிருக்கின்ற அவர்களுங்கூட ஆசைப் படுந்திருவடியன்றோ; நான் ஆசைப் படச்சொல்லவேணுமோ வென்றவாறு. அவர்கள் ஏத்துவது ப்ரயோஜநாந்தரத்துக்காக; நான் ஏத்துவது ஸ்வயம் ப்ரயோஜநமாக என்றுணராய்.

நில நீரொஜீகால் என்று  தொடங்கி, சேதநாசேதநாத்மகமான ஸமஸ்தவஸ் துக்களுக்கும் ஆத்மாவாயிருப்பவனே! என்கிறார். பிரானே! உலகில் எப்பொருளைக்கண்டாலும் அவற்றை நீயாகவே நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்படியானவனே நான்; ஆயினும் அஸாதாரணமான வுன் திருவடிகளைப் பெற்றாலல்லது என் ஆசை தீராதேயென்று காட்டுகிறபடி.

குன்றெடுத்து ஆநிரைமேய்த்து அவைகாத்த—ஆநிரைமேய்க்கைக்காகக் குன்றெடுக்க வேண்டிய அவசியமில்லையாதலால், ‘ஆநிரைமேய்த்து குன்றெடுத்து அவை காத்த’ என்று யோஜித்துக்கொள்வது.

 

English Translation

Alas, when am I to join your red lotus feet, fittingly worshipped by Siva and Brahma? O Lord who stands as Earth, Fire, water. Wind and sky! O My Dancer-Lord who protected the cows under a mount!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top