(3579)

(3579)

கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,

அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்,

எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்,

செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே?

 

பதவுரை

(இப்பெண் பிள்ளையானவள்)

வானவர்கட்கு கொழுந்து என்னும்

நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்;

குன்று ஏந்தி

கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று

கோ நிரை காத்தவன் என்னும்

பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்;

ஆழும்

கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்;

தொழும்

அஞ்ஜலி பண்ணா நின்றான்;

ஆவி அனல் வெவ்வுயிர்க்கும்

ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்;

அஞ்சனம் வண்ணனே என்னும்

அஞ்சனனேமனியனே! என்கிறாள்!

﷐        (இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து)

மேல்  எழுந்து நோக்கி

மேலே தலையெடுத்துப் பார்த்து

இமைப்பு இலள் இருக்கும்

இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்;

எங்ஙனே நோக்கு கேன் என்னும்

எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்;

செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய்

மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே!

என் திருமகட்கு

– பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே

என் செய்கேன் எதைச் செய்வனே?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(கொழுந்து) பிரானே! உன்னுடைய பரத்வ்தையும ஸௌலப்யத்தையும் மாறிமாறி யநுஸந்தியா நின்றாளென்மகள்; வானவர்கட்குக் கொழுந்தே! என்று பரத்வத்தைப் பேசினவாறே கோநிரை காத்தவனே என்று ஸௌலப்யத்தைப பேசுகின்றாள்; குன்றேந்தினவனே! என்ற பின்னையும் ஒரு பரத்வத்தைப் பேசுகின்றாள். பரத்வத்தைக்கண்டு இகழாமைக்காகப் பரத்வத்தைப் பேசுவதும் மாறிமாறிச் செல்லுமே மெய்யன்பர்களுக்கு.

அழும் தொழும்-பக்தி பரவசரைப்போலே கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற படியும். ப்ரபந்நரைப்போலே அஞஜலிபந்தம் பண்ணாநிற்கிறபடியும் சொல்லிற்றாயிற்று. ஆவியானல் வெவ்வுயிர்க்கும்-கீதையிலே ஆத்மஸ்வரூபத்தைப் பேசும் போது அச்சேத்யோயம் என்று சொல்லிற்று. ஆவியானது தஹிக்கவொண்ணாதது என்றபடி. அப்படிப்பட்ட ஆவியும் தஹித்தகாம்படி வெப்பமாகப் பெருமூச்சு விடுகின்றாள். தன்னை இப்படியாக்கின்றது அஞ்சனமேனி யாகையாலே அதைச் சொல்லிக் கூப்பிடுகின்றார்-அஞ்சனவண்ணனே! என்கின்றாள்.

அங்ஙனம் கூப்பிட்டவாறே நீ வரக்கூடுமென்று எண்ணி எழுந்து மேல் நோக்குகின்றாள்; ஒரு க்ஷ்ணம் தோற்றி மறைந்து விடுவாயோவென்று இமையாதே யிருக்கின்றாள். (எங்ஙனே நோக்ககேனென்னும்) ஈடு;- “தான் பார்த்த திக்கில் வரக்காணாமையாலே பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளுமென்று புரிந்து பாராநிற்கும்.”th

என் திருமகட்கு என் செய்கேன் -இவளுக்காக நான் ஏதேனும் உபாயக் அனுட்டிக்கலாகுமோ? என்னவுபாயத்தை யனுட்டிப்பேன். பிராட்டி உம்முடைய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறாப்போலே இவளும் உம்மை அகலகில்லாதே உம்மோடே பொருந்தியிருக்க வேண்டியவளன்றோ?

 

English Translation

O Ranga, what can I do for my precious daughter? She says; “O Lord of gods, you lifted a mount to protect the cows!”, she weeps and folds her hands, and sighs hotly as would dry her soul, she says, “O Lord, how can I see you?”, then looks up and stares

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top