(3527)
வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி,
கொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
பத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே.
பதவுரை
| வைத்த மா நிதி ஆம் |
– |
சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற |
| மது சூதனையே அலற்றி |
– |
எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன |
| பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த | ||
| பத்து நூற்றுள் |
– |
ஆயிரத்தினுள்ளே |
| இப் பத்து |
– |
இத்திருவாய்மொழியை |
| அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து |
– |
அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து |
| உரைப்பார் |
– |
உரைக்க வல்லவர்கள் |
| திகழ் |
– |
நித்யமாக விளங்குகின்ற |
| பொன் உலகு ஆள்வார் |
– |
பரமபதத்தை ஆளப் பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வைத்தமா நிதி) இப்பத்தும் கற்பார் யாவரோ அவரிட்ட வழிக்காயிருக்கும் திருநாம என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருக்கோளூரெம்பெருமானுக்கு வைத்தமாநிதிப்பெருமாளென்று திருநாமம். புதைத்து வைக்கப்படும் பொருள் நிதி யெனப்படும். * தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப்படுவன். நிலத்தினுள் புதைத்துவைத்து ஆளவேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி, எம்பெருமானாகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கதென வாசிகாண்க.
நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது, எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானையுடையவர்களுமப்படியே, * கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே * என்கிறபடியே காண்பதற்கு முன்பும் உறக்கமில்லை, கண்டாலும் உறக்கமில்லை.
நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும், எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே கிடைப்பன்.
நிதியுடையவன் மார்பு நெறிப்பன், எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் * எனக்காரும் நிகரில்லையே * மாறுளதோ விம்மண்ணின் மிசையே * இல்லையெனக் கெதிரில்லை யெனக் கெதிரில்லையெனக் கெதிரே * என்று செருக்கிப்பேசுவார்கள்.
நிதிபடைத்தவனை உலகமெல்லாம் அநுவர்த்திக்கும், எம்பெருமானைக் கைக்கொண்டவனையும் அப்படியே. * மைத்ரேய, பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய சக இத்யாதிகள் காண்க.
நிதியையிழந்தவன் கதறிக்கதறியழுவன், எம்பெருமானை யிழந்தவனுமபைபடியே. ஸ்ரீராமபிரானாகிற வைத்தமாநிதியை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறியழுதரனன்றோ. * வில்லாப ஸபரமத்யே. என்றது காண்க * பழுதே பலபகலும் போயினவென்று கதறியழுவார்கள். * இன்பத்தையழிந்த பாவியேன் என தாவி நில்லாதே * எழில்கொள் நின்திருக்கண்ணினைநோக்கந் தன்னையு மிழந்தேனிழந்தேனே * உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் * என்றிப்படியெல்லாம் கதறியழுவார்கள். *••• ஏகஸ்மிந்நப்யதக்ராந்தே முஹூர்த்தே த்யானவர்ஜிதே, தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணாம் * எம்பெருமானுடைய சிந்தனையையிழந்து ஒரு கணப்பொழுது கழியப்பெற்றாலும், கள்வர் ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறியழக்கூடுமோ அப்படி கதறியழ வேணுமென்பர் அறிவுடையார். இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க.
நிதியுள்ளதென்று அறிந்தவாறே அங்கு விநோதிகள்பலரும் சேருவார்கள், அப்படியே இந்த வைத்தமாநிதிக்கும் விரோதிகள் உண்டாக, அவர்களைத் தானே தொலைத்துத் தன்னைக் காத்துத் தரும்படி சொல்லுகிறது மது சூதனை என்றவிது. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வார் அலற்றிச் சொன்ன ஆயிரத்துள் இத்திருவாய்மொழியை, திருக்கோளூர்க்கே ப்ரவணமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு சொல்லுவார் திருநாட்டை ஸ்வாதீனமாக ஆளப்பெறுவர் என்றதாயிற்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம். நம்பிள்ளை திருவடிகளே சரணம்
English Translation
This decad of the thousand songs by bowered Kurugur’s satakopan on Madhusudana, Vaittamanidi, Lord of Tirrukkolur, will secure the rule of golden Earth for those who can master it.
