(3520)

(3520)

கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ,

சில்லை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே,

செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோ ளூர்க்கே,

மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

பதவுரை

இள மான்

இளமான் போன்ற என்மகள்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே

செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே
மெல் இடை நுடங்க

மெல்லிய (தனது) இடை நோகும்படி
செல்ல மேளினளே

புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி)
சில்லை வாய் பெண்டுகள்

வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு
அயல் சேரி உள்ளாகும்

அயல் சேரியிலுள்ள பெண்களும்
கொல்லை என்பர் கொலோ

இவள் வரம்பு கடந்து நடந்தவள்“ என்று சொல்லிப் பழிப்பர்களோ அல்லது)
குணம் மிக்கனள் என்பர் கொலோ

விலக்ஷணகுண முடையவள்“ என்று சொல்லிக் கொண்டாடுவர்களோ!
எல்லை

என்னாகுமோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கொல்லை யென்பர்கொலோ) என் மகளுடைய நடவடிக்கையைக் கண்டு உலகத்தார் உகப்பர்களோ! அன்றி, வெறுப்பர்களோ வென்று சங்கிக்கிறாள் தாய். “பேறுதப்பாதென்று துணிந்திருப்பதே கடமை என்று திண்ணிய அத்யவஸாய முடையார் “இவள் இங்ஙனே படி கடந்து செல்லுகையாவதென்?“ என்று வெறுக்கக்கூடும், “பேற்றுக்கு த்வரிக்கவும் வேணும்“ என்றிருக்கு செய்தாள்“ என்று வெறுக்கக்கூடும் “பேற்றுக்கு த்வரிக்கவும் வேணும்“ என்றிருக்கு மவர்கள் உகக்கக்கூடும். இரண்டு ஸ்வரூப மென்று காட்டுகிறபடி.

கொல்லை யென்பர் கொலோ – கொல்லை யென்று வரம்பில்லாததுக்குப் பெயர் – “இவள் வாசற்கடந்து புறப்படக் கடவதல்லாத மரியாதை குலைந்தாள், நிஷித்தாநுஷ்டாநம் பண்ணினாள், வரம்பழிந்த செயல் செய்தாள்“ என்று நிந்திப்பர்களோ வென்கை. குணம்மிக்கன ளென்பர். கொலோ? “குணாதிக விஷயத்திலே ஈடுபட்டவளாகையாலே அதற்குத் தக்கப்படி நன்று செய்தாள்“ என்று இவளது குணத்தைச் சொல்லிக் கொண்டாடுவர்களோ?

இப்படி சங்கிக்க ப்ரஸக்தியென்? என்ன, சில்லைவாய் பெண்டுகள் அயற் சேசியுள்ளாருமெல்லே! என்கிறாள். ஸ்த்ரீகளின்வாய் வெறுமணிராது, ஓட்டை வாயைக்கொண்டு ஓயாமல் வம்பளப்பதே அவர்களுடைய பணியாயிருக்கும், அவ்வளவுமன்றிக்கே பகையாளருமுண்டு, பகைமிக்கால் சொல்லுஞ் சொல்லுக்கொரு வரம்புண்டோ? என்கை.

அயற் சேரியுள்ளாரும் என்றதற்கு ஸ்வாபதேசார்த்தம் ஆசார்யஹ்ருதய்தில் “நாலயலார் அயற்சேரியார் உபாயசதுஷ்டயாந்தர்யாமித்வபரர்“ என்கிற சூர்ணையில் அருளிச் செய்ததாம் (அர்ச்சாவதாராதிகளில் ஊற்றமற்று தேவதாந்தர்யாமித்வத்திலே ஊன்றி யிருக்குமவர்களே) அதாவது, அவன் கடைத்தலையிருந்து வாழாதே குளக்கைரையிலே பொதுபோக்கி திரியுமவர்களை அயற்சேரிய ரென்கிறதென்க.

“கொல்லை யென்பர்கொலோ குணம்மிக்கன ளென்பர் கொலோ“ என்கிற சங்கை இப்போது எதற்காக வென்ன, பின்னடிகளால் அதற்கு ப்ரஸக்தி சொல்லுகிறது.

“இளமாள் சென்றாள்“ என்ன வேண்டியிருக்க “இளமான் செல்லமேவினளே“ என்னவாமோ? செல்ல விரும்பினாளென்று பொருள் படுகிறதேயன்றிச் சென்றாளென்று பொருள்படவில்லையே யென்னில், செல்லுகைக்குமுன்னம் இச்சை யிருந்து தீரவேண்டு மாதலால் அந்த இச்சையைச் சொன்னது தத்கார்யமான போக்கைச் சொன்னபடியேயாம்

English Translation

What now? Will the wags in the neighborhood call this an act of shamelessness or of high conduct?  Alas, my tender fawn decided to leave to Tirukkolur swinging her hips, where the Lord lives with abundant wealth!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top