(3519)

(3519)

பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்பட்டில்கள்*

யாவையும்திருமால் திருநாமங்களே கூவியெழும் * என்

பாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே*

கோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ?

பதவுரை

பூவை

பூவைகளென்ன
பை கிளிகள்

பசுமைதங்கிய கிளிகளென்ன
பந்து

பந்துகளென்ன
தூதை

சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன
பூ புட்டில்கள்

பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான)
யாவையும்

இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம்
திருமால் திரு நாமங்களே

பகவானுடைய திருநாமங்களினாலேயாம்படி
கூவி

அத்திருநமங்களைச் சொல்லியழைத்து
எழும்

உஜ்ஜீவிப்பவளான
என் பாவை

எனது பெண்பிள்ளை யானவள்
இனி

இங்கே ஒரு குறையற்றிருக்கச் செய்தேயும்.
தண் பழனம் திரு கோளுர்க்கே போய்

குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய திருக்கோளூர்க்கே புறப்பட்டுப்போய்
கோவை வாய் துடிப்ப

கோவைப்பழம் போன்ற அதரம் துடிக்கும்படியாக
மழை கண்ணொடு

நீர்பெருகப்பெற்ற கண்களோடே நின்று
என் செய்யும் கொலோ

என்னபாடுபடுவளோ! (அவ்விருப்பை நான் காணப்பெற்றிலேனே! என்று அலமருகின்றாளென்க)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பூவைபைங்கிளிகள்) ஐயோ! என்மகள் திருக்கோளூரிலே எப்பாடு படுகிறாளோ வென்கிறாள் தாய்.

முன்னடிகளுக்குப் பொருள் கொள்ளுதலில் சிறிது அவதானம் வேண்டும். பூவைபைங்கிளிகள் முதலானவையும் எம்பெருமானுடைய திருநாமங்களை கூவி யெழும்படியாகச் செய்த என்மகள் – என்று சிலர்க்குப் பொருள் தோன்றக்கூடும், இது ஆபாதப்ரதீதி யாமத்தனை, பந்து தூதை முதலான அசேதநப் பொருள்களையும் கூடச் சேர்த்திருக்கையாலே அவற்றுக்கு வாக்வ்யவஹாரப்ரஸக்தி யில்லாமையாலே அப்பொருள் பொருந்தாது. பூவைபைங்கிளிகள் பந்து முதலான லீலோப கரணங்களைக் கண்டால் வரும் லீலாரஸமும் தனக்கு எம்பெருமானைக் காணுமதுவேயாயிருக்கும் என்மகள் என்பதே பொருத்தமா பொருள் நாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கிடீர் போனாள். இங்கிருந்தநாள் மற்றொன்று தாரகமாய் அங்கே போய் அவனாலே தரிக்கப்பபோனாளோ? பூவை தொடக்கமான லீலோ காரணங்களால் பிறக்கும் ஹர்ஷமெல்லாம் ச்ரிய. பதியென்கிற திருநாமத்தைச் சொல்லி அந்தாலேயிற உண்டாகா நின்றது.“

(என்பாவைபோயினி இத்யாதி.) இங்கு நின்றும் இவள் போக வேணுமா? இங்கே இவளுடைய ஹர்ஷத்துக்கு ஏதேனுங் குறையுண்டோ? என்ன நினைத்துப் போனாளோ அறியலேன். போனாளாகையாலே இனிச் செய்யலாவதொன்றில்லை, போனவிடத்திலாவது இவள் குறையற நன்கு அநுபவிக்க வேணுமே. ஒரு பேச்சுப்பேச வாயெடுத்தவாறே வாய்விட்டு பேசமாட்டாமே உதடு நெளிக்குமே, கண்ணநீர் வெள்ளமிட்டு பெருகுமே, இப்படி என்ன பாட்டுபடுகிறாளோ வென்று தடுமாறுகிறாள் தாய்.

English Translation

Her mynahs, her parrots, her ball, her toys, and flowers boxes were all the ‘the Lord’ for her, -she used to call them by his names, Alas! My doll is now in fertile Tirukkolur itself. With raining eyes and twitching lips, what would she be doing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top