(3350)

(3350)

ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,

தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,

மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,

கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே.

 

பதவுரை

மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய்

மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும்

கான் ஆர் எனமும் ஆய் இன்னம்

வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி

கற்கி ஆம்

கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும்

கார்வண்ணன்

காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான்

ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு

என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு

உகந்து வந்து

உகப்போடோளந்து

தானே இன் அருள் செய்து

தானாகவே இனிய கிருபையைப் பண்ணி

என்னை முற்றவும் தான் ஆனான்

எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆனானாளுடையான்.) இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.

‘என்றஃதே’ என்றவிடத்து, ‘என்ற அஃதே’ என்று பிரிக்க வேணும்; தொகுத்தல் விகாரம்; ‘என்றவஃதே’ என்றாக வேண்டுமிடத்துத் தொக்கது. ‘எம்பெருமான் என்னை ஆட்கொண்டான்’ என்று நான் நன்றி பாராட்டிச் சொன்னதுண்டு; அவன்தானே நெடுநாள் பண்ணின க்ருஷிபலித்து என்னை அடிமைகொண்ட சிந்தனையொழிய நான் ஒரு க்ருக்ஷி பண்ணிற்றிலேன்; உபகார ஸ்மிருதியாக நான் ‘ஆளுடையனானான்’ என்று ஒரு வார்த்தை சொன்னேனே. இவ்வளவையே எம்பெருமான் பற்றிக்கொண்டு, நான் அபேக்ஷியாதிருக்கத் தானே தன் பேறாக க்ருபையைப் பண்ணிவந்து கலந்தான்.

என்னை முற்றவும் தானானான்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; (1) உள்ளோடு புறம்போடு வாசி  பறக்கலந்தான். (2) எனக்கு ஸக்லவித போக்யமுமானான்.

இக்குணம் அவனிடத்து ஆச்சரியமன்று என்பதைப் பின்னடிகளாலே நிரூபிக்கிறார்போலும். மத்ஸ்ய கூர்ம வராஹாவாதிகளான அவதாரங்களைச் செய்து ஆட்படுத்திக்கொள்ள வழி தேடுவதையே இயல்வாக வுடைடியவனன்றோ என்கை.

இன்னங்கார்வண்ணனே- நீர் கொண்டெழுந்த காளமேகமானது மேன்மேலும் வர்ஷிக்க எழுச்சி கொண்டிருக்குமாபோலே எம்பெருமானும் பண்ணின அவதாரங்களில் த்ருப்திபெறாதே இன்னமும் அவதரிக்கவே திருவுள்ளம் பற்றியிருக்கிறபடியைச் சொன்னபடி.

 

English Translation

Seeing that he had a faithful servant in me, he came elated.  By his own sweet grace, he became one with me. The dark Lord who come as the fish, the furtle, the man-lion, the manikin and the wild boar, shall come again as Kalki too, just see!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top