(3287)
திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்,
இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது,
திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே.
பதவுரை
|
(அன்னைமீர்) |
– |
தாய்மார்களே!, |
|
திசைக்கின்றதே |
– |
நீங்கள் இப்படியும் அறிவு கெடலாகுமோ? |
|
இவள் நோய் இது |
– |
இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது |
|
மிக்க பெரு தெய்வம் |
– |
பராத்பரமான தெய்வமடியாக வந்தது; |
|
இசைப்பு இன்றி |
– |
தகுதியில்லாதபடி |
|
நீர் |
– |
நீங்கள் |
|
அணங்கு ஆடும் |
– |
வெறியாடுவிக்கின்ற |
|
இள தெய்வம் அன்று இது |
– |
க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்) |
|
திசைப்பு இன்றியே |
– |
மனக்குழப்பம் தவிர்ந்து |
|
நீர் |
– |
நீங்கள் |
|
இவள்கேட்க |
– |
இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக |
|
சங்கு சக்கரம் என்று |
– |
சங்கென்றும் சக்கரமென்றும் |
|
இசைக்கிற்றிர் ஆகில் |
– |
சொல்ல வல்லீர்களானால் |
|
தன்றே |
– |
நலமாகவே |
|
இல் பெறும்; |
– |
(இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்: |
|
இது காண்மின் |
– |
இங்ஙனே நடத்திப் பாருங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- க்ஷுத்ரதெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்கவரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப்பெறலாமென்கி
றாள். திசைக்கின்றதே என்பது மிக வருந்திச் சொல்வதாகும். இப்படியம் ப்ரமிக்கலாகுமோ ? என்று க்ஷேபிக்கிறபடி.
இவள் நோயிது மிக்க பெருந்தெய்வம் = திருவிருத்தத்தில் “வானோர் தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய் இது” என்றும் “தின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம்” என்றும் உள்ள பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன. “ ………….. என்கிறபடியே
பரதெய்வமான ஸ்ரீமந்நாராயணனாலே உண்டுபண்ணப்பட்ட நோய் இது என்றபடி.
நீர்இசைப்பின்றி அணங்காடும் இளந்தெய்வமன்று இது-இசைப்பு-பொருத்தம்: அஃதில்லாமல் நீங்கள் செய்வித்துப்போருகிற வெறியாடல் முதலான தீயசெயல்களுக்கு இலக்கான தெய்வமடியாக வந்த நோயல்ல இது என்றபடி. இசைப்பின்றி யென்பதற்கு ஈடு:-
“நீங்கள் பண்ணுகிற பரிஹாரத்துக்கும் உங்களுக்கும் ஒரு சேர்த்தியில்லை: இந்நோய்க்கும் இவளுக்கும் ஒரு சேர்த்தியில்லை: முதல்தண்ணிலே பகவத்விஷயத்திலே கைவைத்தார் கொள்ளுகைக்கு ஸம்பாவனையுடைய நோயன்று இதுதான். ஒரு வழியாலும்
ஒரு சேர்த்தியில்லை.”
அணங்காடுதல்-தெய்வமாவேசித்து ஆடுதல். இனிச்செய்யவேண்டிய ஸமஞ்ஜஸமான பரிஹாரப்ரகாரமுணர்த்துவன பின்னடிகள். திசைப்பின்றியே-மருள்கொள்ளாமல்,
எம்பெருமானுடைய திவ்யாயுதங்களை இவள் செவிப்படுமாறு ப்ரஸ்தாவிப்பதே நன்று என்கை.
இவ்விடத்திலே ஒரு ஐதிஹ்யம்: பட்டர்காலத்தில் ஆய்ச்சிமகன் என்றொரு பாகவதர்; அவர் நோவுகண்டு ப்ரஜ்ஞையற்றுக் கிடக்குங்காலத்திலே பட்டர் அவரைப்பார்க்க எழுந்தருளினாராம்: அப்போது அந்த ஆய்ச்சிமகன் அடியோடு அறிவு நடையாடாதபடி
யிருப்பதைக் கண்டபட்டர் அவர் அழகிய மணவாளனிடத்தில் மிக்க பக்தியுடையவர் என்பது காரணமாக அவருடைய செவியிலே மெள்ள ஊதினாப்போலே ‘அழகியமணவாளப் பெருமானே சரணம்’ என்றாராம்: அதனால் உணர்ச்சியுண்டாய் நெடும்போதெல்லாம் அவர்
அந்த வார்த்தையையே சொல்லிக்கொண்டிருந்து திருநாட்டுக்கு நடந்தாராம்.
நன்றே இல்பெறும், நன்று எயில்பெறும்-என்று இரண்டு வகையாகப் பிரிப்பார்கள்; இரண்டாவதில், நன்று-நன்றாக, எயில்பெறும்-வார்த்தை சொல்லப்பெறுவள் என்றவாறு மயக்கம் நீங்கி உணர்த்தியுண்டாகுமென்கை.
English Translation
Alas, You have not understood her sickness; a great divinity has possessed her, not some mean god for whom you dance incongruously. Say clearly and sweetly into her ears, “Conch-and-discus”, She will immediately recover, just see!
