(3185)

(3185)

கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர்

படவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,

அடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர்

கடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே?

 

பதவுரை

கடல் வண்ணன்

கடல் போன்ற நிறத்தையுடையவனாயும்

கண்ணன்

கண்ணபிரானாயும்

விண்ணவர்

பரமபத்திலுள்ளவர்கட்கு

கரு மாணிக்கம்

நீலமணிபோலே போக்யனாயும்

எனது ஆர் உயிர்

எனது அருமையான உயிராயும்

படம் அரவு இன் அணை கிடந்த

படங்களையுடைய ஆதி சேஷனாகிற இனிய படுக்கையில் சயனித்த

பரம் சடர்

பரஞ்சோதியாயும்

பண்டு

முன்பொருகால்

அட

கொல்வதற்காக

வரும்

திரண்டு வருகின்ற

நூற்றவர் படை

துரியோதனாதிகளின் சேனை

மங்க

தொலையும்படியாக

ஐவர்கட்கு ஆகி

பாண்டவ பக்ஷபாதியாகி

வெம் சமத்து

கொடிய பாரத யுத்தத்தில்

அன்று

பகைவர் மேலிட்டு வந்த அந்நாளில்

தேர் கடவிய

(அர்ஜுநனுக்குத்) தேர் செலுத்திய

பெருமான்

பெருமானாயுமிருக்கின்ற எம்பெருமானுடைய

கனை

(வீரத்தண்டையினால்) ஒலிக்கின்ற

கழல்

திருவடிகளை

கண்கள் காண்பது

(என்) கண்கள் ஸேவிக்கப் பெறுவது

என்று கொல்

என்றைக்கோ!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஆழ்வார் தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸௌலப்ய காஷ்டையை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து முடித்து, தாம் அகப்பட்ட துறையான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்க ஆசைப்படுகிறாரிப்பாட்டில். இவ்வாழ்வார் அச்ச்சாவதார ஸௌலப்ய மறிந்திருக்கச் செயய்தேயும் க்ருஷ்ணாவதாரத்திலே எத்திறம்! என்று மோஹிக்கு மியல்வினராதலால் அவ்வவதாரந்தன்னிலேயே இப்போதிவர் ஈடுபட்டுப் பேசுவதும் பொருந்தும்.

பரிச்சேதிக்க வொண்ணாத மஹிமையை யுடையனாய்* அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கசாயியா யிருந்துவைத்து வஸுதேவக்ருஹத்தில் அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் மாளும்படியாகப் பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார்.

ஸேநாதூளியும் உழவுகோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே தொங்கவிட்ட திருவடிகளும் அதிலே சாத்தின சிறு சதங்கையுமாய் ஸாரத்த்ய வேஷத்தோடே நின்றபோதைத் திருவடிகளில் ஆபரணத்வநி செவிப்படவும் அவ்வடிவைக் காணவுமாயிற்று இவர்க்குண்டான ஆசை.

 

English Translation

The ocean-hued Krishna, the black gem of the celestials, my very own soul, is the radiant Lord reclining on a hooded serpent.  He drove the chariot in war for the five against the hundred.  O, when will these eyes of mine see his victorious feet!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top