(3173)
அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே.
பதவுரை
|
அமரர் |
– |
நித்யஸூரிகளினால் |
|
தொழப் படுவானை |
– |
ஸேவிக்கப்படுகிறவனும் |
|
அனைத்து உலகுக்கும் பிரானை |
– |
ஸகல லோகங்களுக்கும் சேஷியுமான ஸர்வேச்வரனை |
|
மனத்தினுள் அமர |
– |
நெஞ்சிலே ஊன்றி யிருக்கும்படி |
|
யோக புணர்ந்து |
– |
யோகாப்யாஸத்தைப் பண்ணி |
|
அவன் தன்னோடு ஒன்றாக அமர |
– |
(முக்தி தசையில்) அவனோடு இம்வாத்ம வஸ்து ஸமானம் என்னும்படியாக |
|
துணிய வல்லார்கள் ஒழிய |
– |
கருதமவர்களான கைவல்ய நிஷ்டர்களைத் தவிர |
|
அல்லாதவர் எல்லாம் |
– |
மற்ற பேர்களெல்லாரும் |
|
அதர |
– |
அநந்யப்ரயோஜனராய்க் கொண்டு |
|
நினைந்து எழுந்து ஆடி |
– |
(அவனை) நெஞ்சிலே யநுஸந்தித்து எங்கும் பரந்து கூத்தாடி |
|
அலற்றுவதே கருமம் |
– |
(துதிகளை) வாய் பிதற்றுவதே செய்ய வுரியது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாசுரத்திற்குப் பொருளுரைக்கும் வகையில் பன்னீராயிரப்படியுரைநாரரான அழகிய மணவாளச்சீயர்தவிர மற்ற வியாக்கியான கர்த்தர்கள் யாவரும் ஒரு மிடறாயிருப்பர்கள். உரைகாரர்மாத்திரம் வேறு வகையாக உரைய்டுகின்றார். அவ்வகையைப் பின்னர் எடுத்துரைப்போம்.
கைவல்ய புருஷார்த்தத்தில் ஊன்றியிருப்பவர்கள் தவிர மற்றையோரெல்லோரும் ப்ரேம பரவசராய் எம்பெருமானுடைய குணாநுபவம் பண்ணிக் களித்துக் கூத்தாடுவதே செய்யத்தக்கது என்கிறாரிப்பாட்டில்- என்கிறவிதுவே திருக்குருகைப்பிரான் பின்னான் முதலான ஆசிரியர்களின் திருவுள்ளம்.
அமரர்களால் தொ தொழப்படுகின்றவனாயும் ஸகலலோகங்களுக்கும் சேஷியாயுமிருக்கின்ற எம்பெருமானை நெஞ்சிலே ஊன்றியிருக்கும்படி யோகாப்யாஸத்தைக் கனக்கப்பண்ணி, கடைசியில் அவனோடுஸாம்யம் பெற வேணுமென்று ஆத்மமாத்ர போகத்தையே விரும்பும் ஸாஹஸிகர்களையொழிய- கைவல்யத்தில் அகப்படாதே பகவத்குணங்களுக்குத் தோற்றவர்களெல்லாரும் பகவத்குணங்களை நெஞ்சிலேயுற்றிருக்கும்படி ஸ்வயம் ப்ரயோஜநமாக அநுஸந்தித்துக் கிளர்ந்தாடியற்றுவதே கர்த்தவ்யம்- என்றாராயிற்று.
“அவன்தன்னோ டொன்றாக அமரத் துணிவல்லார்க கொளழிய” என்ற வளவுக்குப் பொருளுரைப்பதில்தான் அபிப்ராய பேதமுள்ளது. அவன் தன்னோடு ஒன்றாக- அவனோடு ஸாம்யம் பெறும்படியாக; ஆத்மவஸ்து அவனோடுடொத்த சுத்தியை யுடைத்தருள்க- என்றபடி
உரைகாரர் பொருள் கொண்டபடி எங்ஙனே யென்னில்; அவன் தன்னோடொன்றாக = பரமஸாமய்õபதியைப் பெறும்படி, அமரத்துணியவல்லார்கள்- நிலைநின்ற அத்ய வஸாயத்தைப் பண்ணவல்ல பக்திமான்களும், (ஒழிய) அவர்கள் மாத்திரமேயல்லாமல் அல்லாதவரெல்லாம்- மற்றவர்களுங்கூட என்பதாக.
English Translation
The Lord, worshipped by celestials, is Lord of all creation. Those who reach him through yogic penance, find him in their hearts always. For all others, dancing and singing his praise is the only karma.
