(3167)

(3167)

மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை,

தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,

தலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வ ¡தார்,

அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே.

 

பதவுரை

மலையை

கோவர்த்தன மலையை

எடுத்து

குடையாகத் தூக்கி

கல் மாரி

கல் மழையை

காத்து

தடுத்து

பசு நிரை தன்னை

பசுக்கூட்டத்தை

தெலைவு தவிர்த்த பிரானை

துன்பந்தவிர்த்த எம்பெருமானை

சொல்லி சொல்லி

பலகாலுஞ் சொல்லி

எப்போதும்

எப்பொழுதும்

நின்று

நிலைநின்று

ஆதனன்தோடு தலை தட்ட

தரையிலே தலை படும்படியாக

தடுகுட்டம் ஆய்

தலைகீழாக

பறவாதார்

ஸம்ப்ரமியாதவர்கள்

அலைகொள் நரகத்து

துக்கப்படுத்துவதையே இயல்வாகவுடைய நரகத்தில்

அழுந்தி கிடந்து

அழுந்தியிருந்து

உழைக்கின்ற

வருந்ததகின்ற

வம்பர்

வீணராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-   இடையர்கள் இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப்பொருள்களையும் அமைப்பதைக்கண்ட கண்ணபிரான் அவற்றை இந்திரனுக்கு இடவொட்டாது தடுத்துக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லி, பிறகு தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றையெல்லாம் தானே யமுது செய்திட, பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்று ஏழுநாள் விடாமழ பெய்வித்தபோது அம்மலையையே பிடுங்கிக் குடையாகத்தூக்கித்தாங்கி, கோகுலத்தைச்சேர்ந்த ஸகலபிராணிகளையும் அதன்கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளின பெருங்கணத்தில் ஈடுபட்டு விக்ருதராகாதவர்கள் நித்திய ஸம்ஸாரிகளா யொழிவர்களென்கிறார்.

அலைகொள் நரகத்து = அலை என்று நீரில் தோன்றும் அலைக்கும் துக்கத்திற்கும் பெயர். அவ்விருபொருளும் இங்குப்பொருந்தும். * கர்ப்பஜ்மஜராம்ருதிக்லேச கர்மஷடுர்மிக.* என்கிற பட்டர் ஸ்ரீஸூக்தியின்படியும் * தம் வீக்ஷ்ய ஸேது மதுநாபி சரீர வந்த. ஸர்வே ஷடூர்மி பஹுலம் ஜலதிம் தரந்தி *  என்கிற தேசிக ஸ்ரீ ஸூக்தியின் படியும் இந்த ஸம்ஸாரஸாகரம் ஆறுவகையான அலைகள் நிரம்பப்பெற்றதென்றுமிடம் அறியத்தக்கது. இங்கு நரகமென்றது ப்ரத்யக்ஷநரகமாகிய ஸம்ஸாரத்தையே சொன்னபடியாகலாம்.

வம்பர் – புதுமை மாறாதவர்கள்; (அதாவது) நலிகின்ற யமபடர்கட்கு அப்பொழுதைக் கப்பொழுது புதியராகவே யிருப்பவர்களென்கை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “மனநாள் நலிந்தால் பிற்றை நாள் வந்து தோற்றினால் முனநாள் நாம் நலிந்தவன்’ என்று க்ருபைபண்ணாதே மோம்பழம் பெற்றாற்போலே வாரீரோ! உம்மையன்றோ தேடித்திரிகிறது’ என்னும்படியாவர்.”.

 

English Translation

Those who do not dance and touch the Earth with their heads, repeatedly uttering the praises of the Lord, -who stopped a hailstorm with a mountain, -must forever suffer stormy hell as their only retreat.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top