(3164)

(3164)

கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை

மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,

பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,

வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே

 

பதவுரை

வண்டு

வண்டுகள்

கூடி

மொய்த்து

அறையும்

(மதுபானத்தினாலுண்டான களிப்பினால்) ரீங்காரஞ் செய்கின்ற

தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை

காளமேகச்யாமளனைக் குறித்து

மாடு

சுற்றுப்பக்கங்களில்

அலர்

மலர்ந்த

பொழில்

சோலைகளையுடைய

குருகூர்

திருக்குருகூரிலவதரித்த

வள்

ஔதாரியத்தையுடைய

சடகோபன்

நம்மாழ்வார்

சொன்ன

பாடியருளிய

பாடல் ஓர் ஆயிரத்துள்

ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்

இவை ஒருபத்தும்

இந்தப் பத்துப் பாசுரங்களையும்

வல்லார்

அறியவல்லார்

வீடு இல போகம் எய்தி

இடைவிடுதலில்லாத (நிரந்தரமான) பகவதநுபவத்தைப் பெற்று

அமரர்

நித்யஸூரிகளால்

மொய்த்து

நெருங்கி

விரும்புவர்

விரும்பப்படுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  மஹாஜ்ஞாநவான்களான நித்யஸூரிகள் “இருள் தருமா ஞாலமான இந்தப் பிரபஞ்சத்திற பிறந்தும் நம்மைப்போன்ற நன் ஞானத்தைப் பெற்று எம்பெருமானை இவ்வாழ்வார் அநுபவிக்கினறரே!” என்று நம்மாழ்வாரிடத்துத் தாம் கொண்ட பேரன்பினால், ஆழ்வாரருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓதினவர்களிடத்திலும் ப்ரீதி கொண்டு ஸர்வேச்வரனையும் விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பர்களென்க.

ஆழ்வார் தாம் இந்த லீலாவிபூதியை எம்பெருமானுடைய ஸ்வரூபமாக எண்ணி ஈடுபட்டதனோடு நில்லாமல்அதனை யாவரும் அநுஸந்திக்கும்படி செந்தமிழ்ப்பாடலினால் பாடியருளித்ததந்த மஹோபகாரகராதலால் வண்சடகோபன் என்றார்.

வீடு இலபோகம் = வீடு – ‘விடு’ என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். இல இன்மையினடியாப் பிறந்த எதிரிமறைக் குறிப்புப் பெயரெச்சம். போக: என்னும் வடசொல்; போகமெனத்திரிந்தது. விரும்புவர் என்ற பயனிலைக்கு வல்லார் என்பது செயப்படுபொருள். அமரர் வல்லாரை விரும்புவர் என்றபடியாகும்.

 

English Translation

This decad of the sweet thousand songs by flower-groved Kurugur’s satakopan addressing the Lord of Tulasi garland provides liberation and the company of celestials to all who master it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top