(3046)

(3046)

இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன

குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு

திவளும்தண்ணந் துழாய்கொடீர், என

தவளவண்ணர் தகவுகளே.

 

பதவுரை

இவள்

இப் பெண்பிள்ளை

இரா பகல்

இரவும் பகலும்

வாய் வொரி இ

வாய்பிதற்றி

தன

தன்னுடைய

குவலை ஒண் கண்

நெய்தல் மலர்போன்றழகிய கண்களில்

நீர்கொண்டாள்

நீரையுடையளானாள்;

வண்டு

வண்டுகள்

திவளும்

படிகின்ற

தண் அம் துழாய்

குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை

கொடீர்

தருகின்றீரில்லை;

தவளம் வண்ணா

பாரிசுத்தாத்மாவான தேவரீருடைய

தகவுகள்

கிருபைமுதலிய குணங்கள்

என

என்னே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள். இரவும் பகலும் இவள் விஷயமாக நீர்வாய் வெருவவேண்டியது போய் உம் விஷயமாக இவள் விஷயமாக இவள் வாய் வேண்டும்படியாயிற்றே! அநித்ரஸ் ஸததம் ராமஸ் ஸூப்தோபி ச நரோத்தம; ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹாந் ப்ரதிபுத்யதே. என்று சொன்ன திருவடியின் வார்த்தையைக்கொண்டு அறியலாமே நீர்வாய் வெருவினபடி.  அப்படிப்பட்ட வாய்வெருவுதல்கள் இப்போது இவள் பணியாயிற்றே! அவ்வளவேயோ! ஆனந்தக் கண்ண நீர்; பெருக வேண்டிய கண்கள் சோகக் கண்ணீர் பெருகநின்றனவே! இவள் ஏதேனும் அதிகமாக ஆசைப்பட்டதுண்டோ? விரஹஜ்வரத்தாலே வாடின இவள் மார்விலுள்ள மாலையை வாங்கி, உம்முடைய மார்லுள்ள செவ்விமாறாத மாலையைக் கொடுத்தால் போதுமே;  வண்டு பண்ணின தவமும் இவள் பண்ணவில்லை போலும் ஒரு வண்டாகப் பிறக்கப் பெற்றிலேனே யென்று துவளாநின்றாள் காணும்  இவள் அலமாபபுத்தீர இத்தனை திருத்துழாய் ப்ரஸாதமும் கொடுக்கின்றீரில்லையே.

என தவள வண்ணர்தகவுகளே! ஸ்ரீ என்ன என்பது என என்று தொகுத்தலாகவுள்ளது.  சுத்த ஸ்வபாவரான உம்முடைய தயவு என்னே! என்கிறாள். உம்முடைய ஸ்வபாவம் நிஷ்கல்மஷமன்றோ;  இப்படி இரக்கமற்றவளாக நீர்இருக்கிற வழக்கமில்லையே; உம்முடைய இரக்கம் எங்கே போயிற்று? என்கிறாள்.

தவளவண்ணர் என்றதைப் பாரிஹாஸோக்தியாகவைத்து ‘உம்மைப்போலவே நாலு சிஷ்டர்கள் இருந்துவிட்டால் பெண்கள் நன்றாக குடிவாழ்வார்கள்!’ என்று பட்டர் பணிக்கும்படி.

கொடீர்–எதிர்மறை முன்னிலைப்பன்மை வினைமுற்று.

 

English Translation

She raves madly night and day, her beautiful eyes brim with tears. Alas, you do not give her your Tulasi, Such is your compassion, O Great one!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top