(3038)
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே
பதவுரை
|
திருவாய்மொழி– |
– |
திவ்யார்த்ததீபிகை- இரண்டாம்பத்து |
|
உறி கொண்ட |
– |
உறிகளிலே சேமித்து வைத்த |
|
வெண்ணெய் |
– |
வெண்ணெயையும் |
|
பால் |
– |
பாலையும் |
|
ஒளித்து உண்ணும் |
– |
மறைந்திருந்து அமுது செய்த |
|
அம்மான் பின் |
– |
எம்பெருமான் பின்னே |
|
நெறிக் கொண்ட |
– |
அவன் போன வழியே போகிற |
|
நெஞ்சன் ஆய் |
– |
மனத்தையுடையேனாய் |
|
பிறவி துயா |
– |
ஸம்ஸாரத்தொல்லைகளை |
|
கடிந்து |
– |
நிராகாரித்து |
|
குறிக்கொள் ஞானங்களால் |
– |
யமநியமாதிகளாலே கொள்ளப்படுவதான ஞான |
|
விசேஷங்களாலே (உபாஸநாதிகளாலே) |
||
|
எனை ஊழி |
– |
அநேக கல்பகாலங்களில் |
|
செய் |
– |
செய்யப்படவேண்டியதான |
|
தவமும் |
– |
பக்தியோகமாகிற தவத்தின் பயனை |
|
கிறிக் கொண்டு |
– |
(பகவத் க்ருபையாகிற) உபாயத்தைக்கொண்டு |
|
இப் பிறப்பே |
– |
இந்தப்பிறவியில்தானே |
|
சில நாளில் |
– |
சில நாட்களில் |
|
யான் |
– |
அகிஞ்சநனாகிய அடியேன் |
|
எய்தினன் |
– |
அடைந்தேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெடுங்காலம் வருந்தி ஸாதிக்கவேண்டிய புருஷர்ர்த்தத்தை இந்த ஜன்மந்தன்னிலே அற்பகாலத்தில் எளிதாகப் பெற்றேனென்று பகவத்கடாக்ஷத்தின் பெருமையைப் பேசுகிறார். வேதநமென்றும் த்யானமென்றும் உபாஸநமென்றும் பக்திக்கு உள்ள அவஸ்தாபேதங்களை ஞானங்களால் என்ற பன்மையால் காட்டுகின்றார். அவை யமம் நியமம் முதலானவற்றி;ல் ஊன்றியிருந்து ஸம்பாதிக்கவேண்டியவையாதலால் குறிக்கொள் எனப்பட்டது. ‘வெகுஜாக்ரத்தையுடன் ஸம்பாதிக்கவேண்டிய’என்று பொருள்.
எனையூழிசெய்தவமும் ஸ்ரீஇங்குத் தவமென்றது தவத்தின் பலனைச்சொன்னபடி. எத்தனையோ கல்பகாலங்கள் கூடி ச்ரணவம் மநநம் முதலிய செய்கையாகிற தபஸ்ஸின் பலனை ஒரு பெருமுயற்சியின்றியே இப்பிறவியிலேயே சிலநாளிற் பெற்றுவிட்டேன்.
எங்ஙனம் பெற்றுவிட்டீரென்ன, கிறிக்கொண்டு என்கிறார். கிறி யென்பதற்கு உபாய மென்று பொருள். எம்பெருமானே இங்கு உபாயபதத்தினால் விவக்ஷரிக்கப் பட்டானென்றுணர்க. இவ்வாழ்வார்தாமே திருவிருத்தத்தில் தொண்ணூற்றோராம்பாட்டில் எம்பெருமானைப் பெருங்கிறியான் என்று பணித்திருப்பது குறிக்கொள்ளத்தக்கது.
எம்பெருமானாலே பெற்றேனென்கிறீரே; அதற்குப் பொருளென்ன ? அப்பெருமான் விஷயமாக பக்தியோகம் முதலியவற்றைச் செய்து பெற்றீரோ ? என்ன ? இல்லை யில்லை; அவன் கண்ணனாய்த் திருவவதாரித்திருந்தகாலத்தில் திருவாய்ப்பாடியில் ஆயர்மனைகளில் உறிகளிலே சேமித்து வைத்திருந்த வெண்ணெயையும் பாலையும் களவு வழியாலே அமுது செய்தானென்கிற இச்சரீரதையை அநுஸந்தித்தேன்; அவ்வளவாலேயே இது பெற்றேன் காண்மின் என்றாராகிறார்பின்னடிகளால்.
English Translation
What is attained by the penance of many ages through the control of senses. I have attained here in a few days, as mere child’s play. Crossing the pain of existence. I have become a lover of the Lord who stole milk and butter from pots on the rope-shelf.
