(2966)

(2966)

வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்

துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,

எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,

அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே.

 

பதவுரை

அடியரை

தன்னடியாரை

வல்வினை

வலிய கருமங்களினுடைய

துப்பு ஆம்

மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற

புலன் ஐந்தும்

பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு

துஞ்சக் கொடான்

நசித்துப்õபோம்படி விட்டுக் கொடாதவன்

வைப்பு ஆம்

(அவர்களுக்குப் புருஷர்த்தமான) நிதியுமாய்

மருந்து ஆம்

(விரோதி நிரஸந முகத்தால்) மருந்துமாவன்;

அவன்

அந்த எம்பெருமான்

எப்பால்

எவ்விடத்துமுள்ள

யவர்க்கும்

யாவர்க்கும்

நலத்தால் உயர்ந்து உயர்ந்து

ஆனந்தகுணத்தினால் மிகவும் உயர்ந்து

அப்பாலவன்

வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதபடி அப்புறப்பட்டவனாய்

எங்கள்

எங்களுக்கு உரியவனான

ஆயர் கொழுந்து

ஆயர் தலைவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ‘ஐயோ! கைவல்யார்த்திகள் எம்பெருமானைப் பணிந்து க்ஷûத்ரமான பலனைப் பெற்றுப்போவதே!’ என்று அவர்களை நிந்தித்தார்; அவன்றன்னையே ஆசைப்பட்டிருக்குமவர்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்கிறாரிப் பாட்டில். “வைப்பாம் மருந்தாம்” என்ற இரண்டாலும் எம்பெருமானுடைய உபேயத்வமும் உபாயத்வமும் சொல்லப்பட்டதாகும். “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்றும் “வைத்த  மாநிதியாம் மதுசூனன்” என்றும் சொல்லுகிறபடியே கொள்ளக் கொள்ளக்குறையாத மஹாநிதிபோல * கொள்ளமாளாவின்ப வெள்ளமாய் எப்போதும் அநுபவிக்க வுரியனாயிருக்குந்தன்மை ‘வைப்பம்’ என்பதனால் சொல்லப்படுகிறது. அப்படி அநுபவிக்க சக்தியற்றவர்களுக்கு சக்தியைக் கொடுத்தருளுந்தன்மை ‘மருந்தாம்’ என்பதனால் சொல்லப்படுகிறது; இதுதான் உபாயத்வம்.

(அடியரை இத்யாதி.) வணங்காமுடிமன்னனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து  அவனையே பரம ப்ரயோஜனமாகப் பற்றி நிற்குமடியார் விஷயத்திலே மஹோபகவாஞ் செய்தருள்பவன்; அப்படிப்பட்ட அடியார்களை வலிய வினைகளிலே கொண்டுபோய் மூட்டவல்ல ஸாமர்த்தியத்தையுடைய இந்திரியங்களைத்தினாலும் நசித்துப்போகாமை செய்தருள்பவனென்றபடி.

(எப்பால் யவர்க்கும் இத்யாதி.) மண்ணுலகம் விண்ணுலகம் முதலான எல்லாவிடங்களிலும் எல்லாவற்றாலும் உயர்த்தி பெற்றிருப்பார் பலர் உண்டே; அவர்களெல்லாரையும் ஆனந்த குணத்தாலே வென்று அவர்களுக்கு எவ்வளவோ மேற்பட்டவனென்னவேண்டும்படியான நிலைமையிலே நிற்பவன்; இப்படிப்பட்ட ஒப்புயர்வற்றமேன்மை இருக்கச்செய்தேயும் அதனை யெல்லாம் மறைத்துக்கொண்டு கோபாலக்ருஷ்ணனாய்த் திருவவதரித்தவன்.

 

English Translation

The Lord of infinite virtues, beyond reach of person and place is the darling child of the cowherd-clan. He is the medicine and the wealth of devotees; he will not allow the power of the senses to ruin them.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top