(2884)

(2884)

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்

பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்

திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்

குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.

 

பதவுரை

தீது இல் இராமாநுசன்

எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்

தன்னை சார்ந்தவர்கட்கு

தம்மைவந்து அடைந்த வர்களுக்கு

தவம் தரும்

சரனாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;

சரியா பிறவி பவம் தரும் தீவினை

நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடுவினைகளை

பாற்றி தரும்

போக்கடித்தருள்வர்;

பரம் தாமம் என்னும் திவம் தரும்

பரமபதமென்று சொல்லப்படுகிற வானாலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு)

யான்

அடியேன்

அவன் சீர் அன்றி

அவ்வெம்பெருமானாருடைய திருக்குணங்களைத் தவிர்த்து

ஒன்றும்

வேறொன்றையும்

உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன்

மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது. இரண்டாமடியின் முதலிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்; மற்ற நான்கும் எம்பெருமானார் பக்கல் அந்வயிக்குமட் வினைமுற்றுக்கள்.

“சலியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள். பவம். வடசொல். பரந்தாம. வடசொல். திவம். வடசொல் விகாரம்.

 

English Translation

To all those who seek refuge in him, our Ramanuja gives the fruits of his penance, wealth and compassion, and ends the misery of repeated karmic births, then grants the high seat of Vaikunta. Other than singing his glory, my heart does not rejoice in anything.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top