(2619)

(2619)

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,

ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை

வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,

அன்புடைய னன்றே யவன்?

 

பதவுரை

அன்று

முற்காலத்தில்

அம் கை வன் புடையால்

அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால்

பொன் பெயரோன் வாய் தகர்ந்து

இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து

நின்றும்

(என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்

இருந்தும்

வீற்றிருந்தும்

கிடந்தும்

சயனித்திருந்தும்

திரிதந்தும்

எழுந்துஉயாலியும்

ஒன்றும்

கொஞ்சமும்

மார்பு இடந்தான் அவன்

(அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.

அன்பு உடையான் அன்றே

(ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே)

ஓவாற்றான்

திருப்தியடைகிறானில்லை;

என் நெஞ்சு அகலான்

என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நின்றிமிருந்தும்.) கீழ்ப்பாட்டில் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயாமன சரிதைகளைக் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில் தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான் “இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்யவேணும்” என்று திருவுள்ளம்பற்றி இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கிவிட்டான்; அதைப் பேசுகிறாரிதில்

நின்ற தெந்தை யூரகத்து” (திருச்சந்தவிருத்தம் 64) என்றபடி திருவூரகத்தில் நிற்கிறாப்போலே என்னெஞ்சில் நிற்கிறான். நின்று நின்று திருவடிகள் ஓய்ந்து போனால் “இருந்த தெந்தை பாடகத்து” என்றபடி திருப்பாடகத்தில் வீற்றிருக்கிறாப்போலே என்னெஞ்சில் வீற்றிருக்கிறான். வீற்றிருக்குமிருப்பிலும் இளைப்பு உண்டானவாறே “அன்று வெஃகணைக் கிடந்தது” என்றபடி திருவெஃகாவிலே சயனித்தருளுகிறாப்போலே என்னெஞ்சில் சயனித்தருளுகிறான். அதிலும் சிரமம் தோன்றினால் எழுந்து உலாவுகின்றான்; இப்படியே சிற்றல் இருத்தல் கிடைத்தல் திரிதல் என்னும் தொழில்களை ஓயாமல் செய்துகொண்டு என்னெஞ்சை விட்டுப் போகிறானில்லை. ஆனால், பக்தர்சிறத்தில் எம்பெருமான் இவ்வளவு அன்பு கொண்டிருக்கிறானென்பது புதிதான ஒரு ஆச்சரிய விஷயமல்ல. பண்டே ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் அன்பு பூண்டு அரியன செய்து காட்டிய பெருமானுக்கு இவை ஒரு வியப்போ? அன்பின் மிகுதியினால் இத்தனையும் செய்கிறான் என்றாயிற்று.

முதலடியில் சொன்ன நிற்றலிருத்தல் திரிதல்கள் ஆழ்வாருடைய நெஞ்சிலே செய்யப்பட்டவையென்று கொள்ளாமல்  கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை முதலிய திவ்ய பிரதேசங்களிலே செய்திருப்பவற்றைச் சொல்வதாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும். அந்தந்த திவ்யதேசங்களிலே நின்றது மிருந்ததும் கிடந்ததும் திரிந்தது மெல்லாம் ஸமயம்பார்த்து என்னெஞ்சைப் பெறுகைக்காகவே; என் நெஞ்சைப் பெற்றானான பின்பு அந்தந்தத் திருப்பதிகளையெல்லாம் மறந்தொழிந்து என்னெஞ்சையே பற்றிக் கிடக்கிறான்; இதைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் நீங்குவதில்லை; இவ்வளவும் செய்தும் ஒன்றுஞ் செய்யாதானாக நினைத்திராநின்றான் என்றபடி.

ஒன்றுமோவற்றான் = ஓவு அற்றான் எனப்பிரித்து, ஓய்வதை ஸஹிக்கமாட்டான் (அதாவது = ஓயமாட்டான்.) என்று பொருள் கொள்ளலாம். அன்றி, ஓ ஆற்றான் எனப்பிரித்து,ஓ என்பதை ஆச்சரியக் குறிப்பிடைச் சொல்லாகக் கொண்டு, ஆற்றான் – ஆறியிருக்கமாட்டான் (இன்னமும் ஏதேதோ செய்ய வேணுமென்று பாரித்திராநின்றான்) என்று முரைக்கலாம்.

 

English Translation

The Lord in standing, sitting, reclining and striding postured never cares rest, never leaves my heart.  Then in the yore, he came with beautiful hands and strong nails, stopped Hiranya’s mouth and tore his chest.  Is he not loving towards us?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top