(2458)

(2458)

தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்

கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், – எற்கொண்ட

வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,

எவ்வினையும் மாயுமால் கண்டு.

 

பதவுரை

தட கடலை

பரந்த தெற்கு சமுத்ரத்தை

கல் கொண்டு

மலைகளினால்

தூர்த்த

அணைசெய்து அடைத்தவனும்

கடல் வண்ணன் தான்

கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்

என்னை

(தோஷமு வடிவெடுத்தவனான) என்னை

தற்பு

உள்ளபடியே

அறியான் ஏலும்

அறிந்திலனாயினும்,

என் கொண்ட

என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற

வெம் வினையும்

கொடிய பாவங்கள் யாவும்

நீங்க

என்னை விட்டு நீங்கும்படியாக

கண்டு

அழகிய திருக்கண்களாலே குளிரக்கடாக்ஷித்து

மனம்

தனது திருவுள்ளத்தை

விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி

வைத்தான்

(என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)

ஏ வினையும்

பாபமென்று பேர்பெற்றவை யடங்கலும்

மாயும்

உருவழிந்துபோம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னுடைய குற்றமிகுதியை நோக்கி எம்பெருமான் என்னை இகழாமல், என்னுடைய ஸமஸ்த கருமங்களும் உருமாய்ந்து போம்படியாகத் தன் திருவுள்ளத்தை என்பக்கலிலே வைத்தருளினானென்கிறார்.

கடல்வண்ணன் தான் என்னைத் தற்பு அறியானேலும் – ஆழ்வாராகிய தம்மை எம்பெருமான் உள்ளபடி யறிந்திலனென்கிற இதன் கருத்து யாதெனில், இவர் குற்றங்களுக்குக் கொள்கலமாயிருப்பவர், இவிடத்தில் ஒருவகைக்குணமும் கிடையாது“ என்று அறிந்துகொள்ள வேண்டியிருக்க அப்படியறிந்து கொண்டிலன் என்கிறார் நைச்யா நுஸநதாந நிஷ்டையினால்.

(எம்பெருமானை நாம் உள்ளபடி அறிகையாவது –ஒருவகைக் குற்றங்குறையுமற்ற குணநிதி என்று அறிவதாம். அப்பெருமான் நம்மை உள்ளபடி யறிகையாவது ‘ஒருவகைக்குணமுமற்ற தோஷநிதி‘ என்று அறிவதாம். அவனை நாம் உள்ளபடியறியப் பெற்றால் அவனிடத்தில் நமக்கு அன்பு கரைபுரளும், நம்மை அவன் உள்ளபடியறிந்து கொண்டால் நம்மிடத்தில் அவனுக்கு இகழ்ச்சியுண்டாகும்.) இங்கு ஆழ்வார்தம்மிடத்தில் எம்பெருமானுக்கு இகழ்ச்சி பிறவாமல் விருப்பமே பெருகிச் செல்கின்றமைக்குக் காரணம் இவருடைய ஞானபக்தி முதலிய குணங்களைக் கண்டே, அப்படியிருந்தும் ஆழ்வார் நைச்யாநுஸந்தான வுறைப்பினால் ‘என் ற்றங்குளைகளை எம்பெருமான் தெரிந்துகொள்ளாமையினால் மேல்விழுகிறான்‘ என்கிறார்.

தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்தது ஸ்ரீராமாவதாரத்தில்.

என் + கொண்ட, ஏற்கொண்ட.

மூன்றாமடியின் முதலில் ‘எவ்வினையும்‘! என்றுமெடுக்கலாம், ‘வெவ்வினையும்‘ என்றெடுப்பது மோனையின்பத்துக்கு ஒக்கும்.

 

English Translation

The ocean-hued Lord who built a bridge on the ocean, though he did not know me, made arrangements to ensure that my karma did not accrue on me.  So now, no matter how strong, karmic sin cannot affect me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top