(3907)

(3907)

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து

அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்

நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்

குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே.

 

பதவுரை

குமரனார் தாதை  துன்பம் துடைத்த கோவிந்தனார்

முருகனது தந்தையான சிவபிரானது துன்பத்தைப் போக்கியருளின பெருமானாய்

அகப்பணி செய்தவர் விண்ணோர்

அந்தரங்கமான பணிவிடைகளைச் செய்யுமவர்கள் நித்ய முக்தர்களாயிருப்பார்;

அமரர் ஆய் திரிகின்றார்கட்கு ஆதி

அமரரென்று பேர் பெற்றுத் திரிகின்றவர்களுக்கும் தலைவனாயிருக்குமவன்

நமர்களோ

தம்முடையவர்களே!

சேர் அனந்தபுரத்து

நித்யவாஸஞ் செய்கிற திருவனந்தபுரத்திலே

சொல்ல கேண்மின்

நாம் சொல்வதைக்கே உங்கோள்;

அமரா கோன்  அர்ச்சிக்கின்று அங்கு

ஸ்ரீ ஸேனாபதியாழ்வான் ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக

நாமும் போய் நணுக வேண்டும்

அவர்களோடு நாமும் கூடிக் கைங்கரியம் பண்ண வேண்டும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* …….. அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார்.  ஆசாரியஹ்ருதயத்தில்…. (183) “ஸஸைந்யபுத்ர சிஷ்ய ஸாரியஸித்த பூஸுரார்ச்சநத்துக்கு முகநாபி பாதங்களை த்வாரத்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்த சயனத்திலே வ்யக்தம்’’என்றருளிச் செய்த சூர்ணை பெரும்பாலும் இப்பாசுரத்தையே உட்கொண்டதாகும்; “அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி’’ என்கையாலே பிரமன் முதலான தேவர்கள் வந்து பணிகின்றமை தொவிக்கப்படுகிறது. * அமரர் கோன் அர்ச்சிக்கின்ற அங்ககப் பணி செய்பவர் விண்ணோர்* என்கையாலே நித்ய ஸூரிகளில் தலைவரான ஸேநாபதியாழ்வான் ஸபர்வாரராய வந்து அர்ச்சிகின்றமை தெரிவிக்கப்படுகிறது. * நமர்களோ! சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்* என்கையாலே நம் போலியர்களும் சென்று பணியத் தகுந்தமை தெரிவிக்கப்பட்டது. ஆக இங்னே மூவகைப்பட்ட அதிகாரிகளும் ஆச்ரயியப்பதற்குப் பாங்காக இத்தலத்தெம்பெருமான் மூன்றுத்வாரங்களை அமைத்துக் கொண்டு ஸேவை ஸாதியாநின்றான்; முக்கியர்களான நித்யஸூரிகளுக்கு ஸேவைஸாதிக்க முகத்வாரம்; திருநாபியினின்று தோன்றின பிரமன் முதலியோர்க்கு ஸேவைஸாதிக்க நாபித்வாரம்; திருவடியல்லது புகலற்ற நம்போல்வார்க்கு ஸேவைஸாதிக்க ஸ்ரீபாதத்வாரம். குமரனார் தாதை துன்பந்துடைத்த கோவிந்தனாரே….. ருத்ராதிகளுக்கு துக்கநிவர்த்தகனாயிருக்கும்; பசுக்களுக்கும் இடையர்க்கும் கையாளாயிருக்கும்; துர்மான்கிளுக்கும் துக்க நிவருத்தியைப் பண்ணிக் கொடுக்குமவன் அபிமாந சூந்யரான நமக்குத் தன்னைக் கிட்டுகையில் அருமைப்படுத்துவனோ? என்பது கருத்து.

 

English Translation

The Lord reclining in Tiruvanatapura-Nagar, is the Lord of the celestials, whom the first among them, -Visvaksena, -worships, and the other follow.  O My people, listen to me, we too must go and join them, He is Govinda, who ended the woes of Subrahmanya’s father

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top