(2249)
வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, – வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ.
பதவுரை
|
வலிமிக்க |
– |
மஹாபலசாலிகளாய் |
|
வாள் எயிறு |
– |
வாள்போன்ற கோரப்பற்களையுடையராய் |
|
வாள் |
– |
வாட்படையையுடையரான |
|
அவுணர் |
– |
ஆஸுர ப்ரக்ருதிகள் |
|
மாள |
– |
முடிந்து போவதற்காக |
|
வலி மிக்க வாள்வரை மத்து ஆக |
– |
மிக்க வலிவுள்ளதாய் ஒளியையுடைத்தான மந்தர மலையை மத்தாகக்கொண்ட |
|
வலி மிக்க வாள் நாகம் |
– |
அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை |
|
சுற்றி |
– |
கடைகயிறாகச் சுற்றி |
|
கடல் மறுக கடைந்தான் |
– |
கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்) |
|
கோள் நாகம் |
– |
மிடுக்கையுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது |
|
கொம்பு |
– |
கொம்புகளை |
|
ஒசித்த |
– |
முறித்தொழித்த |
|
கோ |
– |
ஸ்வாமியாவன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரயோஜநாந்தரத்தை விரும்புமவர்களானாலும் தன்னை வந்து அடுத்தால் அவர்களது விருப்பத்தைப் படாதன பட்டும் தலைக்கட்டியளாருமவன் எம்பெருமான் என்கிறது இப்பாட்டு.
முன்னொருகாலத்தில், இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்திற், சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணைமயில் தரித்துக்கொண்டு பிரமலோகவழியாய் மீண்டுவருகையில் “துர்வாஸமஹாகமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள், அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஜராவதாயானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்தயானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதயானை அதனைத்துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது, அதுகண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்துவிடக் கடவன‘ நின்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன. ஒழியவே, அசுரர்வந்து பொருது அமர்ரை வென்றனர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் செனறு சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையுந் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸுகியென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரிகடலினுள்ளே அழுந்திவிட தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன். இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹாகூர்ம்மாய் மந்தர பரவதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க, வாஸுகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய இருதிறந்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால தான் ஒரு திருமேனியைக் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வளமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன் – என்பது கடல்கடைந்த வரலாறு.
(அப்பால் அந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தத்வந்தரி யென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அந்த க்ஷீரஸமுத்ரத்திலிருந்து தோன்றினன். அப்பொழுது அசுரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருத“ கலசத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள அந்த எம்பெருமான் ஜகத் மோஹநமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசுரர்களை மயக்கி வஞ்சித்து அமுதத்தை கைக்கொண்டு அமரர்களுடைய கோஷ்டிக்கு மாத்திரம் ப்ரஸாதித்தனன் என்பது அறியத்தக்கது.
கோணாகங் சொம்பொசித்த வரலாறு – கம்ஸன் தன்னைக் கொலைப்பிறந்த தேவகீ புத்திரன் யசோதையினிடம் ஒளிந்து வளர்தல் முதலிய வரலாறுகளை நாரதமுனிவர் சொல்லக்கேட்டு அதிக கோபங்கொண்டு எவ்வகையினாலாவது கண்ணனை கொல்ல நிச்சயித்து, லில்விழாவெண்கிற வியாஜம் வைத்துக் கண்ணப்பிரானையும் பலராமனையும் அழைத்துவரும்படி அக்ரூரனை நியமிக்க, அக்ரூரனுடய பிரார்த்தனைக்கிணங்கக் கண்ணபிரான் நம்பி மூத்தபிரானுடைன் புறப்பட்டு கம்ஸனைரண்மனையை நோக்கி செல்லுகையில், அவ்வரண்மனை வாயில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதபானை சீறிவா. அவ்யாதவவீரர்அதனை யெதிர்த்து அகன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையுமு உயிர தொலைத்து விட்டு உள்ளே புகுந்தனர் – என்பதாம்.
நாகம் – வடசொல்.
English Translation
The powerful elephant’s tusk he pulled out, and killed it too! He came as powerful man-lion and killed the powerful Asura Hiranya. He rolled a powerful snake on a powerful mount and churned the ocean, He is a powerful king.
