(2244)
ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் – பாறேறி உண்டதலை
வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.
பதவுரை
|
ஏறு ஏழும் |
– |
ரிஷபங்களேழையும் |
|
வென்று |
– |
ஜயித்து |
|
அடர்த்த |
– |
தொலைந்த |
|
எந்தை |
– |
ஸ்வாமியான கண்ணபிரான் |
|
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட |
– |
நெருப்புப்போன்ற உருவத்தையுடையவனும் வருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த |
|
வீடு சாபம் |
– |
எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக) |
|
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய |
– |
பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக |
|
கோடு |
– |
குவிந்த |
|
அம் கை |
– |
அழகிய திருக்கையாலே |
|
கீறியெடுத்து அளித்த |
||
|
ஒண் குருதி |
– |
அழகிய ரத்தத்தாலே |
|
கண்ட பொருள் |
– |
அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை |
|
சொல்லில் |
– |
சொல்லத்தொடங்கினால் |
|
கதை |
– |
பெரியதொரு பாரதகதையாக முடியும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ஆச்ரயித்தேனென்று அருளிச்செய்தவர் ‘அவ்வெம்பெருமானே எல்லார்க்கும் ஆச்ரயணீயன்‘ என்று தெரிவிக்க வேண்டி அவனுடைய மேன்மையைத் தெரிவித்தற் பொருட்டு அரனுடைய சாபத்தைத் தீர்த்தருளின கதையை எடுத்துரைக்கிறாரிதில்.
முன்னொருகாலத்தில் பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்த மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவனத சிரயொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியெ சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்செய்வது!‘ என்று கவலைப்பட தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலைய பிச்சையெடுக்கவேண்டும் என்றைக்கு கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும், என்று உரைக்க, சிவபிரான் பல காலம் பல தலங்களிலுஞ் சென்று பிச்சை யேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையப்பெறாமையால் நீங்காமற்போகவே, பின்பு ஒரு நாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் ‘அக்ஷயம்‘ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
சிவனுடைய நிறம் செந்தீநிறமாதலால் “எரியருவந்து“ எனப்பட்டது. விடுசாபம் – வினைத்தொகை, “கபாலீ த்வம் பலிஷ்யஸி“ என்று பிரமானால் பிரயோகிக்கப்பட்ட சாபம் என்றாவது, ‘இந்த சாபத்தைத்தீர்க்க என்னாலாகாது, என்று ஒவ்வொருவராலும் கைவிடப்பட்ட சாபம் என்றாவது பொருள் கொள்க. சாபம் – சாபத்திற்காக, சாபம் நீங்குவதற்காக என்றபடி பாறு பிணந்தின்னிப்பறவை பாறேறியுண்டதலை – மாம்ஸ விருப்பத்தினால் முண்டத்தைப் பருந்து முதலிய பறவைகள் உண்பது வழக்கமாதலால் அவ்வழக்கம் பற்றிய விசேஷணம் இது. 1. “தொடரெடுத்தமால்யானை“ என்றதுபோல.
ஒண்குருதி – அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திருமேனியில் நின்றுமுண்டான ரக்தமாகையாலே ‘ஒண்குருதி‘ என்று சிறப்பித்துக் கூறப்பட்ட தென்க. சொல்லில் கதை – “பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
English Translation
The Lord who destroyed seven bulls also filled the hot-tempered but-rider Siva’s begging bowl of Brahma’s vulture-eaten skull with the blood of his heart and rid him of his curse. But that is an epic story.
