(2242)
நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், – அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு.
பதவுரை
|
அன்று கருமாணி ஆய் |
– |
முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று |
|
இரந்த |
– |
(மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த |
|
கள்வனே |
– |
க்ருத்ரிமனான பெருமானே! |
|
நின்றது ஓர் பாதம் |
– |
(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது |
|
நிலம் |
– |
பூமண்டலத்தை |
|
புதைப்ப |
– |
ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு) |
|
நீண்ட தோள் |
– |
விம்ம வளர்ந்த திருத்தோளானது |
|
திசை எல்லாம் சென்று |
– |
திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து |
|
அளந்தது என்பர் |
– |
(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது) |
|
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு |
– |
உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் புகழ்ந்து பேசப்பட்ட ஆச்ரிதபாரதந்திரிய குணத்தை (அல்லது, அவதார விக்ரஹவைலக்ஷணயத்தை) உலகளந்த சரிதைமுகத்தால் அநுபவிக்கிறாரிதில்.
மாவிலியிடத்தில் உதகதாநம் பெறும்போது சிறிய இரண்டு திருவடிகளோடே நீ நின்றுகொண்டிருந்தாயே, அத்திருவடிகளுள் ஒரு திருவடியானது விம்மவளர்ந்து பூமிப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது. மேலுலகங்களை ஆக்கிரமிப்பதற்காக இரண்டாவது திருவடியை உயரத்தூக்க நினைத்திருக்கையிலே திசைகள் தோறும் விம்மவளர்ந்த திருத்தோள்களை மேலூலகப் பரப்பு முழுவதையும் ஆக்ரமித்துவிட்டன என்று சமத்காரமாகச் சொல்லுகிறார்.
இப்படி மாவலியை வஞ்சித்து உலகமளந்தவிது ஆச்ரிதனான இந்திரனுக்காகச்செய்து செயலென்று ஸாமாந்யமாகச் சிலர் நினைக்கக் கூடுமாயினும் அவ்விந்திரனொருவனுக்காக மாத்திரம் செய்த காரியமன்று இது, “அப்பெருமானையே நாம் விச்வஸித்திருந்தால் நமக்காகவும் இப்படி தன்னை அழியமாறியும் காரியஞ் செய்தருள்வன்“ என்று ஒவ்வொருவரும் நம்பியிருப்பதற்குடலாக எல்லார்க்குமாகச் செய்த காரியமேயாம் இது – என்கிறார் பின்னடிகளில்.
வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “உன்னைப் பேணாதே உன்னுடைய விபூதியை அவன் (மாவலி) தன்னதென்ன, அவன் பக்கலிலே இரந்தாயாய் வஞ்சித்தாயாய்ச் செய்த்து இந்த்ரனொருத்தனுக்குச் செய்த்தேயோ? ‘ஆச்ரித் விஷயத்தில் தன்னை அழிய மாறி, வஞ்சிக்கும் – தூதுபோம் ஸாரதத்யம்பண்ணும் – எல்லாம் செய்து ரக்ஷிக்கும்‘ என்று உன்னை ப்ரமாணித்தவர்கள் மார்விலே கைவைத்துறங்கும்படி பண்ணினாயத்தனையன்றோ என்பதாம்.
English Translation
O Earth-measuring Lord! Then you came as a dark manikin and practised deceit. While your one foot covered the Earth, your long arms stretches and measured all the Quarters, Aho, the fortunate ones who saw you then!
