(2016)
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.
பதவுரை
|
மைஆர் கடலும் |
– |
கருங்கடலையும் |
|
மணிவரையும் |
– |
நீலமணிமயமான மலையையும் |
|
மா முகிலும் |
– |
காளமேகத்தையும் |
|
கொய் ஆர் குவளையும் |
– |
பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும் |
|
காயாவும் |
– |
காயாம்பூவையும் |
|
போன்று |
– |
ஒத்து |
|
இருண்ட |
– |
கறுத்த |
|
மெய்யானை |
– |
திருமேனியையுடையவனும் |
|
மெய்யம் மலையானை |
– |
திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும் |
|
சங்கு ஏந்தும் கையானை |
– |
திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை |
|
தொழா |
– |
அஞ்சலிபண்ணாத |
|
கை |
– |
கைகளானவை |
|
கை அல்ல |
– |
கைகளேயல்ல |
|
கண்டாம் |
– |
(இதனை நாம் நன்கு) அறிவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸர்சேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, உலக்கையே என்றதாயிற்று. கைதொழாக் கையல்ல-தொழாக்கை கையல்ல என்று அந்வயிப்பது. கையல்ல, உலக்கையே.
English Translation
The Lord has a dark hue like the deep ocean, the gem mountain, the laden cloud, the blue lotus and the kaya flower. He bears a conch in his hand, and resides in Tirumeyyam. Those who do not fold their hands in worship hae no hands, We know it, –
