(2015)
கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,
ஓடா அடலரியை உம்பரார் கோமனை,
தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே.
பதவுரை
|
கூடா |
– |
பகைவனான |
|
இரணியனை |
– |
ஹிரண்யாஸுரனுடைய |
|
மார்வு |
– |
மார்பை |
|
கூர் உகிரால் |
– |
கூர்மைபொருந்திய நகங்களாலே |
|
இடந்த |
– |
கீண்டருளின |
|
ஓடா |
– |
(அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத |
|
அடல் |
– |
வீரம்பொருந்திய |
|
அரியை |
– |
நாசிங்கமூர்த்தியானவனும் |
|
உம்பரார் கோமானை |
– |
நித்யஸூரிகட்குத் தலைவனும் |
|
தோடு ஆர் நறு துழலாய் மார்வனை |
– |
இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை |
|
ஆர்வத்தால் |
– |
அன்புடனே |
|
பாடாதார் |
– |
பாடப்பெறாதவர்களுடைய |
|
பாட்டு |
– |
பாட்டுக்களானவை |
|
என்றும் |
– |
ஒருநாளும் |
|
பாட்டு அல்ல |
– |
பாட்டுக்களாகமாட்டா |
|
கேட்டோம் |
– |
(என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
ஓடாவடலாரியை-இரணியனைக்கண்டு பின்வாங்கியோடாத நரசிங்கம்; இனி ஓடுதல் நடையாடுதலாய், நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரசிங்கம் என்னவுமாம்.
English Translation
The fierce lion-form that came and destroyed the perverse Hiranya by learning his chest with claws, is the Lord of gods. He wears a cool fragrant garland of Tulasi. Songs which do not sing his praise with love are no songs at all, so we have heard.
