(1981)
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே.
பதவுரை
|
ஆயிரம் பேரானை |
– |
ஆயிரந்திருநாமங்களையுடையனான எம்பெருமானுடைய |
|
பேர் |
– |
திருநாமங்களை |
|
பாடப் பெற்றாள் |
– |
பாடப்பெற்றவரான |
|
கலியன் |
– |
ஆழ்வார் |
|
ஒலிசெய் |
– |
அருளிச்செய்த |
|
தமிழ் மாலை |
– |
தமிழ்ச் சொல்மாலையாகிய திருமொழியை |
|
கற்றார் |
– |
கற்பவர்கள் |
|
பெற்றுஆரார் |
– |
அந்த எம்பெருமானை லபித்தும் த்ருப்தியடைய மாட்டார்க்ள் |
|
முற்று உலக ஆள்வார் |
– |
உலகங்கள் முழுவதையும் ஆளப்பெறுவாக்ள் |
|
இவை |
– |
இப்பாசுரங்களை |
|
கேட்கல் உற்றார்க்கு |
– |
செவிதாழ்த்துக்கேட்கு மவாக்ளுக்கு |
|
உலகத்தே |
– |
உலகமெங்கும் |
|
உறு துயர் இல்லை |
– |
அநுபவிக்கக்கூடிய துக்க மொன்றுமில்லையாகும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பேருமாயிரம் பேசநின்ற பெருமானுடைய திருநாமங்களையே பாடிப் போதுபோக்கும்படியான பாக்கியமுடையரான ஆழ்வார் அருளிச்செய்த இத்திருமொழியை அதிகரிப்பவாக்ள் இவர் தம்மைப்போலவே ஆயிரம்பேரானைப் பேர் பாடப் பெற்று ஆராத காதலையுடையராயிருப்பார்க்ள்; இவ்வளவேயல்லாமல் முற்றுலகையும் ஆளும்படியான செல்வச் சிறப்பும் பெற்றிடுவார்கள். இத்திருமொழியைக் கற்பவர்கட்கு மாத்திரமேயன்றி பலன்; இதனைச்செவி தாழ்த்துக்கேட்க விரும்புமவர்கட்கும் அவசியம் அநுபவித்தே அறவேண்டிய துயர்களும் தொலைந்திடும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.
English Translation
This is a garland of sweet Tamil songs by Kaliyan, blest to sing the praise of the Lord of a thousand names. Those who learn to sing it will never satiate, Lo! They will rule the whole Earth, Even those who merely hear it, will be rid of sorrow.
