(1963)
பூங்கு ருந்தொசித்து ஆனை காய்ந்தரி மாச்செகுத்து,
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டுவன் பேய்முலை
வாங்கி யுண்ட,அவ் வாயன் நிற்கஇவ் வாயன்வாய்,
ஏங்கு வேய்ங்குழல் என்னோ டாடும் இளமையே.
பதவுரை
|
பூ குருந்து ஓசித்து |
– |
பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும் |
|
ஆனை காய்ந்து |
– |
ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும் |
|
அரி மா |
– |
(கேசியென்ற) சத்துருவான குதிரையை |
|
செகுத்து |
– |
கொன்றவனாயும் |
|
ஆங்கு |
– |
கம்ஸனது அரண்மனை வாசலிலே |
|
வேழத்தின் |
– |
குவலயாபீடமென்கிற யானையினுடைய |
|
கொம்பு கொண்டு |
– |
தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும் |
|
வன்பேய் |
– |
(பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய |
|
முலை |
– |
(நஞ்சு தீற்றிய) முலையை |
|
வாங்கி |
– |
கையிற்பிடித்து |
|
உண்ட அவ் வாயன் |
– |
உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான் |
|
நிற்க |
– |
உதாஸீநனாயிருக்க |
|
ஆயன் |
– |
அந்த கோபாலகிருஷ்ணனுடைய |
|
வாய் |
– |
வாயிலே |
|
ஏங்கு |
– |
ஒலிக்கின்ற |
|
இ வேய் குழல் |
– |
இந்த வேய்ங்குழலானது |
|
என்னோடு |
– |
என்திறத்திலே |
|
இளைமை ஆடும் |
– |
சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரானுடைய வேணுகானம் செவிப்பட்டுப் பிரிவாற்றாதே வருந்திப் பேசுகிற ஒரு ஆய்ப்பெண்ணின் நிலைமையிலே நின்று பேசும் பரசுரமாயிற்றிது. ஸர்வசக்தனான எம்பெருமான் வாளாகிடக்க, அவனுடைய வேய்ங்குழல் என்னோடே தோள் வலிகாட்டி வருகின்றதே யென்கிறாள். முதலடியில் ‘ஆனைக் காய்ந்து’ என வலிமிகாதது வழுவன்று; வடமொழியில் சாந்தஸப்ரயோகம்போலக் கொள்ளத்தக்கது.
English Translation
The Lord broke the Marudu trees, killed the bulls, fore the horse;s Jaws, pulled out the elephant;s fusk and sucked the ogress breast with his lips, Alas, the cowherd playing his flute makes my heart flutter!
