(1952)
குன்ற மொன்றெடுத் தேந்தி,
மாமழை அன்று காத்தவம் மான்,
அ ரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்.
பதவுரை
|
அன்று |
– |
முன்பொருகால் |
|
குன்றம் ஒன்று |
– |
(கோவர்த்தனமென்கிற) ஒருமலையை |
|
எடுத்து |
– |
(குடையாக) உயரவெடுத்து |
|
ஏந்தி |
– |
(ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து |
|
மா மழை |
– |
(இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும் |
|
காத்த |
– |
(அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின |
|
அம்மான் |
– |
ஸ்வாமியும் |
|
அரக்கரை |
– |
ராக்ஷஸாக்ளை |
|
வென்ற |
– |
கொன்றொழித்த |
|
வில்லியார் |
– |
வில்லையுடையருமான பெருமாளுடைய |
|
வீரமே கொலோ |
– |
பராக்ரமத்தினாலோ |
|
தென்றல் வந்து தீ வீசும் |
– |
தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது! |
|
என் செய்கேன் |
– |
(இதற்கு) என்ன பண்ணுவேன்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (தென்றல்வந்து தீ வீசும்: (இது) ஞ்.வில்லியார்வீரமே கொலோ) தென்றலோவென்னில் பொதுவாக எல்லார்க்குங் குளிர்ச்சியைப் பண்ணாநின்றது; அதுதானே என்னளவில் நெருப்பை உமிழாநின்றால் இது தனக்கு ஒரு ஹேது இருக்கவேணுமே; குன்றெடுத்து மழைதடுத்து, வி;ல்லெடுத்து அரக்கரை மடித்தவர் இந்திரனிடத்திலும் அரக்காரிடத்திலும் காட்டின வீர;யத்தை என்னிடத்திலுங் காட்டவேண்டி இத்தென்றலைத் தீ வீசுமாறு ஏவினா; போலும்; “ரிஷாஹாதுதாவதெ” என்ற உபநிஷத்தின்படி அவர்க்கு அஞசி நடுங்கி உலாவக்கடவதன்றோ காற்று; அது தீ வீசும்போதைக்கு அவருடைய ஸங்கல்பமே அடியாயிருக்கவேணுமிறே என்கிறாள்.
English Translation
The Lord lifted a mountain and stopped the rains. He is the bow-wielder who destroyed the Rakshasas. Alas! The breeze fans my love fire. Is this any sign of his valour? I do not know!
