(1950)
இன்னா ரென்றறியேன்,
அன்னே. ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
இன்னா ரென்றறியேன்.
பதவுரை
|
அன்னே |
– |
அம்மே! |
|
ஆழியொடும் |
– |
திருவாழியாழ்வானையும் |
|
பொன்ஆர் சார்ங்கம் |
– |
அழகுபொருந்திய சார்ங்க வில்லையும் |
|
உடைய |
– |
(திருக்கையிலே) உடைய வரான |
|
அடிகளை |
– |
ஸ்வாமியை
|
|
இன்னார்என்று |
– |
இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன் |
|
அறியேன் |
– |
இன்னார்என்று அறியேன்-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால் இங்கேபோதுங் கொலோ” என்று கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய வருகையைப் பிரார்த்தித்து மநோரதித்த பரகால நாயகிக்கு உருவெளிப்பாட்டாலே காட்சி தந்தருளுனான் எம்பெருமான்; ஆழியும் சார்ங்கமு மேந்திவந்து ஸேவை ஸாதித்தான்; அஸாதாரண லக்ஷணங்களைக் காணா நிற்கச் செய்தேயும்; இன்னாரென்று அறுதியிடக்கூடாமலிருக்கிறதாயிற்று அத்தலையில் வைலக்ஷண்யம். பெருமையைப் பார்க்குமிடத்தில் தேவனென்னலாயிருந்தது; எளிமையைப் பார்க்குமிடத்தில் மனிதாரிலே ஒருவனென்னலாயிருந்தது; ஆகவே ‘இன்னாரென்றறியேன்’ என்கிறாள். – வியப்புக்குறிப்பிடைச் சொல். ஆடிகள் – ஸ்வாமி.
English Translation
I know not his looks. Lord who wields a discus. Conchand sarnga bow in his big hands –I know not his looks.
